தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 januari 2017

வவுனியாவில் கொடூரம்..! பணமே எமனான சோகம்..! அம்பலமாகும் உண்மைகள்

கடந்த 11ஆம் திகதி வவுனியா தேக்கவத்தை பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பிள்ளைகளின் தந்தையான பாலநிசாந்தன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர் யார்..? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்..? குறித்த கொலையினை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் உள்ளிட்ட விடயங்கள் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாலநிசாந்தன் திருமணமாகி நிலையில், குடும்ப தகராறு காரணமாக சில மாதங்களா தனது குழந்தையுடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
மேசன் தொழில் செய்து வரும் பாலநிசாந்தன் குடி பழக்கமுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பாலநிசாந்தன் சிறுவயதாக இருக்கும் போதே அவரின் தாயார் வெளிநாடு சென்று விட்டார்.
இதன் காரணமாக சிறிய தாயின் அரவணைப்பில் இருந்து அவருக்கு கோபமும், பிடிவாத குணமும் அதிகமாகவே இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் தாயார் பாலநிசாந்தனுக்கு செலவுக்கு பணம் அனுப்பி வரும் நிலையில், அவர் படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு 75 ஆயிரம் ரூபா பணம் அனுப்பப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வழமைப்போல் வேலைக்கு சென்று வரும் பாலநிசாந்தன், கடந்த சில நாட்களாக அறிமுகம் இல்லாத நடுத்தர வயதுடைய ஒருவருடன் பழகி வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, சம்பவ தினத்தன்று அதிக மது போதையில் பாலநிசாந்தன் தள்ளாடியப்படி, அந்த புதிய நபருடன் பாலநிசாந்தன் வீடு வந்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த பெண் ஒருவர் அந்த ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில், படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரே பாலநிசாந்தனை வீட்டுக்குள் அழைத்து சென்று படுக்க வைத்துள்ளார்.
பின்னர் பாலநிசாந்தனை சாப்பிட அழைத்த போது நிசாந்தன் தூங்குவதாக அந்த சந்தேகநபரே பதில் அளித்துள்ளார். எனினும், குறித்த நபர் அந்த இடத்தை விட்டு தப்பி செல்லவே அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், பாலநிசாந்தனின் தாயார் அனுப்பிய பணம் மற்றும் அவரது கையடக்க தொலைபேசி ஆகியன காணாமல் போயுள்ளதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாலநிசாந்தனின் சகோதரன் கருத்து தெரிவிக்கையில், எனது சகோதரனின் மரணத்தில் மர்மம் இருக்கின்றது. இக்கொலையானது திட்டமிட்ட வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணத்துக்காக கொலை நடைபெற்றிருந்தாலும் இது ஒரு திட்டமிட்ட கொலை இக்கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளேன் என கூறியுள்ளார்.
இதேவேளை, பாலநிசாந்தனை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் சந்தேகநபரைத்தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். சந்தேகநபர் கண்டி பிரதேசத்திற்கு தப்பித்து சென்றிருப்பதாக தெரிக்கப்படுகின்றது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/community/01/131661

வவுனியா தேக்கவத்தையில் வசித்து வந்த குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிசாந்தன் (25) நேற்றுமுன்தினம் (11) தனியாக வீட்டிலிருந்தபோது படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இக்கொலை தொடர்பாக பலர் பலதகவல்களை வெளியிட்டிருந்தபோதும் எமதுதினகரன் செய்தித்தளத்திற்காக விசேட செய்தியாளர் நேரடியாக தகவல்களை சேகரித்தபோது கருத்துத் தெரிவித்த உறவினர்கள்,
பாலநிசாந்தன், திருமணமாகி இரண்டு வயது ஆண் குழந்தைக்கு தந்தை என்பதுடன், மனைவியுடன் ஏற்பட்ட குடம்பத்தகராறு காரணமாக சில மாதங்கள் பிரிந்திருந்த நிலையில் தனது பாட்டியின் எதிர் வீட்டிலேயே வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
சிறுவயதிலேயே தாயார் வெளிநாடு சென்றதனால் சிறிய தாயின் அரவணைப்பில் வளர்ந்த நிசாந்தனிடம் கோபமும் பிடிவாதமும் அதிகமாகவே காணப்பட்டது.
பெரியவனானதும் மேசன் வேலைக்குச் செல்லும் நிசாந்தன் நண்பர்களுடன் குடிப்பதும் அரட்டை அடிப்பதும் என்ற நிலையில் வெளிநாட்டிலுள்ள தாயார் நிசாந்தனை தன்னுடன் வைத்துக்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டுக்கு எடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது கைகூடவில்லை என்பதுடன் நிசாந்தன் அதில் ஆர்வம் காட்டவில்லையென்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டிலுள்ள தாயார் அடிக்கடி நிசாந்தனுக்கு செலவுக்கு பணம் அனுப்பி வருவதாகவும் தெரியவருகிறது.
அந்த வகையில் வழமையோல் வேலைக்கு செல்லும் நிசாந்தன் ஊருக்கே அறிமுகமில்லாத நடுத்தரவயதுடைய ஒருவருடன் கடந்த மூன்று நாட்களாக பழகிவந்துள்ளார்.
நிசாந்தன் கொல்லப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் 75 ஆயிரம் ரூபா பணம் நிசாந்தனின் தாயாரினால் நிசாந்தனுக்கு அனுப்பப்ட்டிருந்த நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு சம்பவ தினத்தன்று (11) பி.ப. 1.30 மணிக்கு நிறை போதையில் தள்ளாடியபடி அந்த புது மர்ம நபருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நிசாந்தனை படுகொலை செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் நிசாந்தனை கைத்தாங்கலாக அழைத்து வந்து வீட்டினுள் படுக்க வைத்திருந்தார்.
அதன் பின் நிசாந்தனை சாப்பிட அழைத்தபோது நிசாந்தன் தூங்குவதாக மர்மநபரே பதிலளித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அப்பெண் நிசாந்தனை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியதன் காரணமாக அவர்மேல் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்ததுடன் நிசாந்தனிடம் தாயார் அனுப்பிய பணம், அவருடைய பேர்ஸ் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியன காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட நிசாந்தனின் சகோதரன் கருத்து தெரிவிக்கையில் எனது சகோதரனின் மரணத்தில் மர்மம் உள்ளது இக்கொலையானது திட்டமிட்ட வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது பணத்துக்காக கொலை நடைபெற்றிருந்தாலும் இது ஒரு திட்டமிட்ட கொலை இக்கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் பொலிசாரிடம் தெரிவித்தள்ளேன்.
எனது சகோதரனின் கொலை ஏன் நடந்தது என்பதுடன் கொலைகாரனையும் பொலிசார் கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் நிசாந்தன் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரை கைது செய்தததுடன் விசாரணைகளை மேற்கொண்ட பின் இன்று (13) விடுதலை செய்துள்ளனர்.
அத்துடன் நிசாந்தனை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் சந்தேகநபரைத்தேடி வலைவிரித்துள்ளதுடன் சந்தேகநபர் கண்டி பிரதேசத்திற்கு தப்பித்து சென்றிருப்பதாக தெரியவருகிறது.
படுகொலை செய்யப்பட்ட நிசாந்தனின் தாயார் இலங்கைக்கு வந்த பின்னரே இறுதிக் கிரிகைகள் மேற்கொள்ளப்படும் என உறவினர் தெரிவித்தனர்.


20

Geen opmerkingen:

Een reactie posten