தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 december 2017

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன்!


பிரித்தானியாவிலிருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார்.
29 வயதான நவரத்தினம் புதிர்வேந்தன் என்ற இளைஞன் எதிர்வரும் 3ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.
எனினும் நாடு கடத்தலுக்கு எதிராக புதிர்வேந்தன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Scottish குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிர்வேந்தனுக்கு ஆதரவாக வழக்கு தொடுத்துள்ளனர்.
வழக்கின் மூலம் சாதகமான பதில்கள் கிடைக்கும் என புதிர்வேந்தன் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நவரத்தினம் புதிர்வேந்தன் என்ற குறித்த இலங்கையர் பிரித்தானியாவில் தஞ்சம் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அவர் தனது சொந்த நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாகியதாகவும், மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்தில் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் South Lanarkshire பகுதியில் உள்ள Dungavel தடுப்பு மையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி அவரை நாடு கடத்துவதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது.
புதிர்வேந்தன் இலங்கையில் மோசமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர் திருப்பி அனுப்பப்பட்டால் கைது செய்யப்படலாம் என அவரது குடியேற்றம் தொடர்பான சட்டத்தரணி Euan MacKay தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புதிர்வேந்தன் பிரித்தானியாவுக்கு தப்பி சென்று, அரசியல் அகதி தஞ்சம் கோரினார். எனினும் கொலை குற்றச்சாட்டு ஒன்றில் அவர் தெற்காசிய நாடுகளை விட்டு வெளியேறினார். இந்தக் குற்றச்சாட்டு தமிழ் இயக்கத்திலுள்ள பிரிவுகளுக்கு உட்பட்டதாகும்.
தனது தரப்புவாதியின் பாதுகாப்பு பற்றி ஒரு “புறநிலை சான்றுகள்” சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி விசாரிக்க வேண்டும் எனவும் Euan MacKay தெரிவித்துள்ளார்.
இந்த சான்றுகளில் புதிர்வேந்தன் கடந்த மூன்று ஆண்டுகளாக Glasgowவில் வாழ்ந்த வந்த போது ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதற்கான தமிழ் ஊடக அறிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டம் உள்ளடங்குகின்றது.
புதிர்வேந்தனின் ஆரம்ப புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கை உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பிரித்தானிய அலுவலர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்வதற்காக உள்துறை அலுவலகத்திற்கு அவர் தேவைப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடந்தது என Euan MacKay தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் புதிர்வேந்தன் இரண்டு அதிகாரிகளோடு ஒரு அறையில் தடுத்து வைக்கப்பட்டார், மேலும் அவருடைய வீட்டையும் குடும்பத்தையும் பற்றி பல்வேறு விசாரணைகள் அவரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக புதிர்வேந்தன் Euan MacKayயிடம் தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் விசாரணை இடம்பெற்ற தினத்தன்று இரவு தான் விடுவிக்கப்பட கூடும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அரசியல் பிரச்சாரம் அவர் திரும்பி வந்தால் அவரை ஆபத்தில் வைக்கும் என்பதே கவலை என MacKay குறிப்பிட்டுள்ளார். முன்பு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அவருடைய பாதுகாப்பு பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். நமது பார்வை வலுவாக உள்ளதுடன், தமிழர்களுக்கு ஆதரவாக ஆதாரங்களைக் கொண்டு வந்துள்ளோம். இந்த காரணிகள், ஒன்றாக எடுக்கப்பட்டால், அவருடைய வழக்கு ஒரு குடியேற்ற நீதிபதிக்கு முன் செல்ல வேண்டும் என்று நாங்கள் கூறுவோம் என சட்டத்தரணி MacKay தெரிவித்துள்ளார்.


http://www.tamilwin.com/uk/01/168739?ref=ls_ta_d

Geen opmerkingen:

Een reactie posten