தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 januari 2014

கிருஸ்தவ சர்ச்சின் கதவை பிடித்து இந்த உலுப்பு உலுப்புகிறார்கள் தேரர் !

நேற்று முந்தினம் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள கிருஸ்தவ சர்ச் ஒன்றை பெளத்த பிக்குகள் சேர்ந்து அடித்து நொருக்கியுள்ளார்கள். இச் செய்தியை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள். ஆனால் இங்கே அதற்கான வீடியோவை இணைத்துள்ளோம். இது இதுவரை வெளியாகவில்லை. இலங்கையில் உள்ள கடற்கரைகளில் ஹிக்கடுவ கடற்கரை மிகவும் பிரபல்யமானது. அங்கே வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக பிரித்தானியர்கள் செல்வது அதிகம். இன் நிலையில் அங்கே நீண்ட நாட்களாக இருந்த சர்ச் ஒன்றின் மீது தான் இந்த புத்த பிக்குகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இந்த சுற்றுவட்டாரத்தில், பலர் வெள்ளைக்காரர்களை நம்பி தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். 

ஆனால் அங்கே சர்ச் இருக்க கூடாது என்பது இந்த புத்த பிக்குகளின் கோரிக்கையாக இருக்கிறது. முதலில் ஊர்வலமாக வரும் பிக்குகள், ஏதோ அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள் என்று தான் நினைக்க தோன்றும். ஆனால் பின்னர் பாருங்கள் வெறிபிடித்த மிருகங்கள்போல, இவர்கள் சர்சின் கதவுகளை உலுப்புகிறார்கள். பின்னர் அத்துமீறி நுளைந்து சர்சை தாக்குகிறார்கள். பிக்குகளுக்கு என்ன அப்படி கிறீஸ்தவர்கள் மீது கோபம். இவர்களுக்கு இந்துக்களை கண்டால் பிடிக்காது ! கிறீஸ்தவர்களை கண்டால் பிடிக்காது ! முஸ்லீம்களை கண்டால் கூட பிடிக்காது என்றால் இவர்கள் யார் ? உண்மையில் இவர்கள் நோக்கம் தான் என்ன ? இலங்கையில் இருந்து , வேறு மதத்தவர்களை விரட்டியடிக்க தான் இவர்கள் முஸ்தீப்பு காட்டி வருகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறது. 


http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6254

Geen opmerkingen:

Een reactie posten