தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 januari 2014

டக்ளஸ், சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்தவர்களுக்கு விக்னேஸ்வரன் பரிசு!- சிங்கள ஊடகம்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை படுகொலை செய்ய முயற்சித்தவர்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பரிசில்களை வழங்கியதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸை கொலை செய்ய முயற்சித்த சத்தியலீலா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்த ரகுபதி சர்மா ஆகியோருக்கு மட்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சேலைகளை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இவ்வாறு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலையில் பல இந்து கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த இரண்டு கைதிகளுக்கு மட்டும் வட மாகாண முதலமைச்சர் பரிசில்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்ட குறித்த கைதிகளுக்கு பரிசில்களையும் வழங்கியள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten