தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 januari 2014

நாட்டுக்கு அச்சுறுத்தலாக வடமாகாணசபை இளைஞர்களே – மகிந்த!


கடந்த காலங்களில் நாட்டுக்கு அச்சுறுத்தலாக வடமாகாணத்தின் இளைஞர்கள் காணப்பட்டார்கள். ஆனால் அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி தற்போது நாட்டின் முன்னேற்றத்துக்காக தமது அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக ஜனாதிபதி மகிக்ந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கையிலேயே பிறந்து, இலங்கையை எதிரிநாடாக பார்த்து, சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் தாம் அதிருப்தி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தல் மிகுந்த நாடாக இங்கை கடந்த காலங்களில் காணப்பட்டது.
ஆனால் தற்போது வடக்கில் இருந்து தெற்கு வரையில் அச்சம் இன்றி சுதந்திரமாக பயணிக்க முடிந்தள்ளது. 30 வருட கால யுத்தம் நிறைவு செய்யப்பட்டு, விரைவான அபிவிருத்தி நோக்கி இலங்கை செல்கிறது.
ஆனால் இலங்கையை விமர்சிக்கின்ற சில நாடுகள், இலங்கையில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடர்பில் மொளனம் காத்து வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/58972.html

Geen opmerkingen:

Een reactie posten