தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 19 januari 2013
vrijdag 18 januari 2013
இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் பொறிமுறையை வலியுறுத்தி நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, எதிர்வரும் பெப்ரவரி- மார்ச் மாத மனித உரிமைகள் சபை அமர்வின்போது, இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
இதில் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் வகையிலான ஐக்கிய நாடுகளின் பொறிமுறை ஒன்று குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று நவநீதம்பிள்ளையின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் குற்றவியல் பிரேரணையின் மூலம் முன்னாள் பிரதம நீதியரசர் நீக்கப்பட்டமை குறித்து நவநீதம்பிள்ளை தமது தீவிர கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் அவரது அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரர் சிராணி பண்டாரநாயக்க மீது மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் பிரேரணையின்போது இலங்கையின் நீதிமுறைகள் உரிய வகையில் கடைப்பிடிக்கப்படவில்லை. அத்துடன் இலங்கையின் சட்டத்துக்கு இந்த குற்றவியல் பிரேரணை, ஒரு பின்னடைவு என்றும் நவநீதம்பிள்ளையின் அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் ஒருக்கட்டமே முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையாகும்.
இதேவேளை புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களை மறுத்து அதற்காக கடந்த மனித உரிமை சபை அமர்வுகளில் கருத்துக்களை முன்வைத்தவராவார்.
எனவே அவர் புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமை இலங்கையின் நீதித்துறையில் பாரிய துஸ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் என்றும் நவநீதம்பிள்ளையின் அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryBScNWkr6.html
நிர்வாணமான பெண்களால் போப் அதிர்ச்சியடைந்துள்ளார் !
ஓரினச்சேர்க்கையை எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை,அப்படி அங்கீகரித்தால் அது ஒழுக்கத்தை தரும் நெறியுமல்ல ,குரானிலும்,பைபிளிலும் இயற்கையாக உரியது இருக்க செயற்கையாக ஏற்பில்லாத ஒன்றுக்கு ஆசைப்படுவது ,செய்வது தவறு என்று சொல்லப்படுகிறது.இந்துமதத்திலோ துறவறமே சிறந்தது என்பதே ஆரம்பத்தில் போற்றப்பட்டது,இல்லறம் துறவறத்துக்கு வழிகாட்ட்டுவதாக அமையவேண்டும் என்றே சொன்னது.ஓரினச்சேர்க்கை மனக்கட்டுப்பாடற்றவர்களின் இயற்கையை சீரழிப்பவர்களின் ஏற்பாடே,இன்று மனிதத்தின் மரணமே இவர்கள் அதிகரிப்பின் காரணம்.மனவடக்கமற்ற இப்படியானவர்களை அங்கீகாரம் செய்வது மனிதத்தின் பேரழிவே!!
வெள்ளை இனத்தவர்கள் இலங்கைக்கு எதிராகப் போர்கொடி ! நாம் என்ன செய்கிறோம் ?
எங்களை அண்ணன் அன்றே வீட்டுக்கு போக சொல்லிட்டார்,தமிழ் ஈழத்தை தனது படை பெற்று எங்களுக்கு தரும் என்றார்,நம்பிட்டோம்,ஆனால் நடக்கலை,இப்போ என்ன செய்ய என்றால் நாம் என்ன செய்ய??!!
Abonneren op:
Posts (Atom)