தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 maart 2011

பெண் புலிகளை மண்வெட்டியால் கொலைசெய்த இராணுவத்தின் கொடூரங்கள் !

28 February, 2011

இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால் ஓரமாக நடாத்தப்பட்ட சில கொலைகள் தொடர்பாகவும், மே 18க்கு முன்னர் சில புலிகள் உறுப்பினரைப் பிடித்த இராணுவத்தினர் அவர்கள் கைகளையும் கால்களையும் கட்டி பின்னர் சுடுக் கொண்றுள்ளதோடு, சரணடைந்த பெண் புலி உறுப்பினர் சிலரை மண்வெட்டியால் தலையில் கொத்தியும் கொண்றுள்ளனர். சில இடங்களில் இலங்கை இராணுவம் பாவித்த எரிகுண்டுகளால் பலரின் உடல்கள் எரிந்து கருகியுள்ளதையும் இப் புகைப்படங்கள் சில காண்பிக்கின்றன.

குறித்த புகைப்படங்கள் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான ஒரு இராணுவச் சிப்பாய் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. இவரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள சில புகைப்படங்களை அதிர்வு இணையம் பெற்றுள்ளது. இது குறித்து ஜ.நாவின் சட்டத்துக்கு புறம்பான கொலைகளுக்கு பொறுப்பபதிகாரியாகவுள்ள பிலிப் அல்ஸ்டனை அதிர்வு இணையம் தொடர்புகொண்டு இப் புகைப்படங்களை அவர்களுக்கு வழங்குவதற்காகன ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் அறியத்தருகிறோம். எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காணொளிகள் இணையத்தில் வெளியிட முடியாத அளவு கோரமாக உள்ளதோடு, பல ரகசியங்களையும் அது கசியச் செய்யலாம் என்ற அச்சம் இருக்கிறது.

அதனால் அக் காணொளியை நாம் தவிர்த்துள்ளதோடு அதனை ஜ.நாவுக்கு முதலில் அனுப்ப ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.






Geen opmerkingen:

Een reactie posten