[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 05:25.27 AM GMT ]
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க கோரியும் இல்லையேல் பொது வேட்பாளரின் மூலம் அரசை கவிழ்ப்போம் என எச்சரித்தும் ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் ஒரு கூட்டமும் ஜனாதிபதியை ஆதரித்து அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் மற்றொரு கூட்டமும் இடம்பெறுகின்றன.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கக்கோரி எதிர்க்கட்சியின் பொது எதிரணியினர் இன்று கொழும்பில் கங்காராமை முத்தையா மைதானத்தில் எதிர்ப்பு பேரணிக்கூட்டம் நடத்தவுள்ளனர்.
அரசாங்க பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் இணைத்தலைவர் அதுரலிய ரத்ன தேரர் மற்றும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் ஏற்பாடு செய்திருக்கும் இவ் எதிர்ப்பு கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரும் பங்கேற்கவுள்ளனர்.
சட்டத்தரணிகள் சங்கம், சுதந்திர ஊடக மையம், ஜனநாயகத்திற்கான தேசிய இயக்கம், சமகி இயக்கம் ஆகிய அமைப்புக்களும் கலந்து கொள்வதுடன், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, இடதுசாரி மக்கள் முன்னணி, சோசலிசக்கட்சி ஆகிய கட்சிகளும் இணைந்து கொள்கின்றன.
இன்று பிற்பகல் மூன்று மணிக்கு முத்தையா மைதானத்தில் இடம்பெறும் இக்கூட்டத்தில் ஐயாயிரத்துக்கு அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல் பொது எதிரணியில் ஒன்றிணைந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்ககுமாறு ஜனாதிபதிக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தமது கோரிக்கையினை ஏற்று அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு இணங்காவிடின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அரசை வீழ்த்த பொது எதிரணியினை உருவாக்குவதாகவும் எதிர்க்கட்சிகளின் பொது எதிரணியினர் இணங்கியுள்ளனர்.
ஆதரவு கூட்டம்
இதேவேளை ஜனாதிபதி முறைமையினை நீக்குவது அடுத்தவொரு தீவிரவாதத்திற்கு வித்திடும் எனக் குறிப்பிட்டு அரசாங்கத்தினை வலுப்படுத்த அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தினால் இன்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் அரச ஆதரவு கூட்டமொன்று இடம்பெறுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கமே வெற்றி பெற வேண்டி பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்காது ஜனாதிபதியை பலப்படுத்தவும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் , தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினர், பொதுபல சேனா அமைப்பினர், சிங்கள ராவய அமைப்பினர் உள்ளிட்ட பெருளவானோர் இந்தக் கூட்டததில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் இக்கூட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக் ரணவக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தாம் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnv1.html
மூன்றாவது தடவையும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தின் மறுபக்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தீர்ப்பை வழங்குவதாக இருக்கும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கக்கோரி எதிர்க்கட்சியின் பொது எதிரணியினர் இன்று கொழும்பில் கங்காராமை முத்தையா மைதானத்தில் எதிர்ப்பு பேரணிக்கூட்டம் நடத்தவுள்ளனர்.
அரசாங்க பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் இணைத்தலைவர் அதுரலிய ரத்ன தேரர் மற்றும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் ஏற்பாடு செய்திருக்கும் இவ் எதிர்ப்பு கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரும் பங்கேற்கவுள்ளனர்.
சட்டத்தரணிகள் சங்கம், சுதந்திர ஊடக மையம், ஜனநாயகத்திற்கான தேசிய இயக்கம், சமகி இயக்கம் ஆகிய அமைப்புக்களும் கலந்து கொள்வதுடன், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, இடதுசாரி மக்கள் முன்னணி, சோசலிசக்கட்சி ஆகிய கட்சிகளும் இணைந்து கொள்கின்றன.
இன்று பிற்பகல் மூன்று மணிக்கு முத்தையா மைதானத்தில் இடம்பெறும் இக்கூட்டத்தில் ஐயாயிரத்துக்கு அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல் பொது எதிரணியில் ஒன்றிணைந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்ககுமாறு ஜனாதிபதிக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தமது கோரிக்கையினை ஏற்று அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு இணங்காவிடின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அரசை வீழ்த்த பொது எதிரணியினை உருவாக்குவதாகவும் எதிர்க்கட்சிகளின் பொது எதிரணியினர் இணங்கியுள்ளனர்.
ஆதரவு கூட்டம்
இதேவேளை ஜனாதிபதி முறைமையினை நீக்குவது அடுத்தவொரு தீவிரவாதத்திற்கு வித்திடும் எனக் குறிப்பிட்டு அரசாங்கத்தினை வலுப்படுத்த அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தினால் இன்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் அரச ஆதரவு கூட்டமொன்று இடம்பெறுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கமே வெற்றி பெற வேண்டி பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்காது ஜனாதிபதியை பலப்படுத்தவும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் , தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினர், பொதுபல சேனா அமைப்பினர், சிங்கள ராவய அமைப்பினர் உள்ளிட்ட பெருளவானோர் இந்தக் கூட்டததில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் இக்கூட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக் ரணவக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தாம் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnv1.html
மாதவி எறிந்த மாலை கோவலன் கழுத்தில் விழுந்த காதை!
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 05:27.21 AM GMT ] [ வலம்புரி ]
நடன மாதுவாகிய மாதவிக்கும் கோவலனுக்கும் எவ்வாறு பந்தம் ஏற்பட்டது என்பது குறித்து செவிவழிக் கதையொன்று உண்டு.
நடனமாடி நிற்கும் மாதவி ஒரு கழுத்து மாலையை எடுத்து சபையோர் மத்தியில் எறிகிறாள். மாலை யாருடைய கழுத்தில் விழுகிறதோ அவனைத் திருமணம் செய்வதென்பது நியதி.
இந்த நியதியோடு மாதவி எறிந்த மாலை கோவலனுடைய கழுத்தில் விழுகிறது. கெடுகாலம், கழுத்து மாலை உருவில் கோவலனிடம் வருகிறது.
ஏற்கனவே அறிவித்த நிபந்தனையின் படி கோவலன் மாதவியைத் திருமணம் செய்கிறான்.
முன்னதாக கண்ணகியைத் திருமணம் செய்த கோவலனின் கழுத்தில் மாலை விழுந்த போது அவன் தாளாத புளகாங்கிதம் அடைந்தான்.
ஆனால் தன் கழுத்தில் விழுந்த மாலைதான், தன் கழுத்து வெட்டப்படுவதற்குக் காரணம் என்பதை அவன் அப்போது அறிந்திலன்.
மாலை விழுகிறது என்பதற்காக அது நல்ல சகுனம் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்கு கோவலனின் கதை நல்ல உதாரணம்.
நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடைவையும் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடலாம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மூன்றாவது தடவையாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் மற்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கமும் தெரிவித்திருந்த நிலையில், மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டிட முடியுமா? என்பதை அறியும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்டிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விளக்கம் அனுப்பி வைத்த உயர் நீதிமன்றம், மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் மேற்படி அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டது என்பதால் அந்தச் செய்தி எந்தவிதமான பரபரப்பையும் ஏற்படுத்தாது என்பது நிறுத்திட்டமான உண்மை.
அதேநேரம் மூன்றாவது தடவையும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தின் மறுபக்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தீர்ப்பை வழங்குவதாக இருக்கும்.
உயர் நீதிமன்றம் அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மகிந்தவுக்கு அளித்த விளக்கம் கோவலன் கழுத்தில் விழுந்த மாலையாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க அல்லது கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாஸ என்பவர்களில் யார் போட்டியிட்டாலும் அவர்களின் வாக்குப்பலம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியே தீர்மானிக்கும்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொது வேட்பாளராகப் போட்டியிட்டால் ஐ.தே. கவின் வாக்குப்பலத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவர்களில் ஒரு பகுதியினரின் வாக்குப்பலமும் சந்திரிகாவை வந்தடையும்.
ஆக, 3-வது முறையாகவும் போட்டியிடலாம் என்று விளக்கம் தராமலிருந்தால் எங்களுக்கு இந்தக்கதி வந்திருக்காது என்று வருந்துகின்ற நிலைமையும் ஏற்படலாம்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnv2.html
நடனமாடி நிற்கும் மாதவி ஒரு கழுத்து மாலையை எடுத்து சபையோர் மத்தியில் எறிகிறாள். மாலை யாருடைய கழுத்தில் விழுகிறதோ அவனைத் திருமணம் செய்வதென்பது நியதி.
இந்த நியதியோடு மாதவி எறிந்த மாலை கோவலனுடைய கழுத்தில் விழுகிறது. கெடுகாலம், கழுத்து மாலை உருவில் கோவலனிடம் வருகிறது.
ஏற்கனவே அறிவித்த நிபந்தனையின் படி கோவலன் மாதவியைத் திருமணம் செய்கிறான்.
முன்னதாக கண்ணகியைத் திருமணம் செய்த கோவலனின் கழுத்தில் மாலை விழுந்த போது அவன் தாளாத புளகாங்கிதம் அடைந்தான்.
ஆனால் தன் கழுத்தில் விழுந்த மாலைதான், தன் கழுத்து வெட்டப்படுவதற்குக் காரணம் என்பதை அவன் அப்போது அறிந்திலன்.
மாலை விழுகிறது என்பதற்காக அது நல்ல சகுனம் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்கு கோவலனின் கதை நல்ல உதாரணம்.
நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடைவையும் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடலாம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மூன்றாவது தடவையாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் மற்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கமும் தெரிவித்திருந்த நிலையில், மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டிட முடியுமா? என்பதை அறியும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்டிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விளக்கம் அனுப்பி வைத்த உயர் நீதிமன்றம், மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் மேற்படி அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டது என்பதால் அந்தச் செய்தி எந்தவிதமான பரபரப்பையும் ஏற்படுத்தாது என்பது நிறுத்திட்டமான உண்மை.
அதேநேரம் மூன்றாவது தடவையும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தின் மறுபக்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தீர்ப்பை வழங்குவதாக இருக்கும்.
உயர் நீதிமன்றம் அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், உயர் நீதிமன்றம் ஜனாதிபதி மகிந்தவுக்கு அளித்த விளக்கம் கோவலன் கழுத்தில் விழுந்த மாலையாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க அல்லது கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாஸ என்பவர்களில் யார் போட்டியிட்டாலும் அவர்களின் வாக்குப்பலம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியே தீர்மானிக்கும்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொது வேட்பாளராகப் போட்டியிட்டால் ஐ.தே. கவின் வாக்குப்பலத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவர்களில் ஒரு பகுதியினரின் வாக்குப்பலமும் சந்திரிகாவை வந்தடையும்.
ஆக, 3-வது முறையாகவும் போட்டியிடலாம் என்று விளக்கம் தராமலிருந்தால் எங்களுக்கு இந்தக்கதி வந்திருக்காது என்று வருந்துகின்ற நிலைமையும் ஏற்படலாம்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnv2.html
Geen opmerkingen:
Een reactie posten