பயிற்சிக்குச் சென்ற மாணவி மீது இராணுவம் பாலியல் பலாத்காரம்
கண்டி – கன்னொருவ இராணுவ முகாமில் இடம்பெற்ற பயிற்சி வகுப்பிலேயே மாணவி ஒருவர் இராணுவ சிப்பாய் ஒரவாரல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.இந்த கொடூர சம்பவத்தை அரசாங்கம் திட்டமிட்டு மூடிமறைத்துள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக்க குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளை கலதேவ இராணுவ முகாமில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் போது வி.கே.டி.ஆர். கௌசல்யா என்ற மாணவி ஏழு அடி உயர சுவரில் இருந்து குதிக்கும் போது படுகாயமடைந்துள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மாணவியின் முதுகெலும்பு முறிந்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.
மாணவர்கள், பெற்றோர், விரிவுரையாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது அரசியல் தேவைக்காக அரசாங்கம் மாணவர்களுக்கு தனது இராணுவ இயந்திரத்தைக் கொண்டு தலைமைத்துவ பயிற்சி அளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த பயிற்சிகள் மூலம் மாணவர்களின் உயிருக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இடம்பெற்ற தலைமைத்துவ பயிற்சிகளில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் இந்த இரண்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுதலையாகும் சாத்தியம்
மீனவர்களான இவர்கள், 2011–ம் ஆண்டு நவம்பர் 28–ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கையில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் இலங்கை மீனவர்கள் மூவரும் பிடிபட்டனர்.இவர்கள் மீதான வழக்கை கொழும்பு ஐகோர்ட்டு நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனா விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த 30–ந் தேதி தீர்ப்பு அளித்தார். அத்துடன் மேல் முறையீடு செய்வதற்கு 14–ந் தேதி வரை அவர் அவகாசமும் வழங்கினார்.இந்த தீர்ப்பு, தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் பெருத்த சோகத்தையும், தமிழகம் எங்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தீர்ப்புக்கு எதிராக பரவலாக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரத்து 200–க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டன.
5 மீனவர்கள் மீதான மரண தண்டனையை எதிர்த்து மேல்–முறையீடு செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு, அப்பீல் வழக்கின் செலவுக்காக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடந்த 8–ந் தேதி ரூ.20 லட்சம் அனுப்பி வைத்தது
இந்த நிலையில், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்புக்கு எதிராக இலங்கை அப்பீல் கோர்ட்டில் இந்திய தூதரகத்தின் சார்பில் நேற்று மேல்–முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை தமிழக மீனவர்கள் சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் அனில் சில்வா உறுதி செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவ காரம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேயு டன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப் போது இந்தியா- இலங்கை இடையே உள்ள கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 தமிழக மீனவர்களை இந்திய சிறைச் சாலைக்கு மாற்ற ராஜபக்சே சம்மதம் தெரிவித்தார்.
இலங்கையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப மந்திரியாக இருப்பவர் பிரபா கணேசன். இவர் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந் தித்துப் பேசினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தூக்குத் தண்டனை விதிக் கப்பட்ட 5 தமிழக மீனவர் கள் மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள 24 மீனவர்கள், அவர்களது 79 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று நான் ராஜபக்சேயிடம் வலி யுறுத்தினேன். அதற்கு அவர், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.
மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில் தமிழக மீனவர்கள் 5 பேரும் 2 அல்லது 3 நாட் களில் விடுதலையாகி விடு வார்கள் என்றும் என்னிடம் ராஜபக்சே தெரிவித்தார். அதே சமயத்தில் இந்த தண் டனையை எதிர்த்து இந்திய தூதரகம் மேல் முறையீட்டு வழக்கை நடத்தினால் அது முடிய 6 மாதங்களுக்கு மேல் ஆகி விடும் என்றார். எனவே இது தொடர்பாக தனது மன்னிப்பு வழங்கும் முடிவு பற்றி கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரி விக்கும்படி அதிபர் என் னிடம் கேட்டுக் கொண்டார். நானும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விட்டேன்.
இவ்வாறு இலங்கை மந்திரி பிரபா கணேசன் கூறினார்.
அமைச்சர் பிரபா கணேசன் தங்களை தொடர்பு கொண்டு ராஜ பக்சே மன்னிப்பு வழங்க தயாராக இருப்பது பற்றி கூறியதை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் உறுதி செய்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ராஜபக்சேயின் நடவடிக் கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் மேல்முறையீடு திரும்ப பெறப்படும் என்று கூறப்படுகிறது. இது தொ டர்பாக இன்று இந்திய வெளியுறவுத் துறை அதி காரிகள் முடிவு எடுக்க உள் ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten