தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

மஹிந்த ராஜபக்‌ச தேர்தலில் போட்டியிடுவது குறித்து உச்சநீதிமன்றத்தின் தகவல்!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
உச்சநீதி மன்றத்தின் 10 நீதிபதிகள் கொண்ட குழு இந்த தகவலை பாராளுமன்றத்தில் வெளியிட்டது மட்டுமன்றி ஊடகங்களுக்கும் வெளியிட்டுள்ளது.

நவம்பர் 11ம் திகிதி பாராளுமன்றத்தின் சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா இந்த தகவலை வாசித்துள்ளார்.

இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் நவம்பர் மாதம் 10ம் திகிதி உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் 18 வது திருத்தத்தின் கீழ் மகிந்த ராஜபக்‌ச மூன்றாவது முறையாக போட்டியிடலாம் என கூறியுள்ளது.

இது குறித்து நீதிபதி ஒருவர் கூறுகையில்,
இந்த வழக்கின் போது வழக்கறிஞர்கள் எவரும் இடம்பெறவில்லை என்றும், வழக்கு ஒத்தி வைப்பு திகதியும் குறிப்பிடவில்லை எனவும் கூறினார்,
மேலும் இது போன்ற வழக்கை விசாரித்து 2 தினங்களில் தீர்ப்பு வழங்குவது சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgt5.html

Geen opmerkingen:

Een reactie posten