[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 06:06.56 AM GMT ]
இன்று காலை தொடக்கம் கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அலுவலகத்தில் இருந்து அவரது பைல்கள் மற்றும் உடைமைகள் ஒதுக்கிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
அலுவலகம் காலி செய்யப்பட்டதன் பின்னர் பெரும்பாலும் இன்று மாலைக்குள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இதற்கிடையே அமைச்சர் பதவியிலிருந்து ராஜித சேனாரத்ன விலகினால், அவருக்கு எதிரான பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு, இரண்டொரு நாட்களுக்குள் அவர் கைது செய்யப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற கடிதத் தலைப்பை தனது வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் உறுப்பினர் பதவி ராஜிதவிடமிருந்து பறிபோனது. அக்காலகட்டத்தில் அவர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சை காலி செய்த ராஜித சேனாரத்ன
மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சில் இருந்து தனது பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜித சேனாரத்னவுடன் தொடர்புகளை கொண்டுள்ள எதிர்க்கட்சியின் பிரதிநிதி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ராஜித சேனாரத்னவின் புதல்வர் கொழும்பு முத்தையா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற தூய்மைக்கான நாளை அமைப்பு நடத்திய பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான மில்ரோய் பெர்ணான்டோ தனது வலது காலை எடுத்து வைத்து ராஜபக்ஷ எதிர்ப்பு முகாமுக்கு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சில் இருந்து தனது பொருட்களை அப்புறப்படுத்த தயாராகி வருவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்க நேற்று கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் அதனை அவர் நிராகரித்து விட்டதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYivz.html
தங்கத் தாம்பாளத்தில் பிரதமர் பதவி! திரும்பியும் பார்க்காத மைத்திரிபால- ஜனாதிபதி கையெழுத்திட்டார்: மைத்திரிபால வெளியேறுகின்றார்?
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 06:29.09 AM GMT ]
நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய செயற்குழு கூட்டத்தின் இடைநடுவில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் அதனை மறுத்து, தனக்கு பிரதமர் பதவியில் நாட்டமில்லை என்று முகத்திலடித்தாற் போன்று பதிலளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஜனாதிபதி தரப்பினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கையெழுத்திட்டார்: மைத்திரிபால வெளியேறுகின்றார்?
அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தற்போது தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டதை அடுத்து அமைச்சர் மைத்திரிபால சிரிசேன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கொழும்பு-07 ல் உள்ள மகாவெலி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஒன்றிலேயே அமைச்சர் மைத்திரிபால சிரிசேன நீண்டகாலமாக வசித்து வந்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சு பதவியை துறந்து ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறும் முடிவில் உள்ள அவர் முதற்கட்டமாக உத்தியோகபூர்வ இல்லத்தை காலிசெய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
தற்போது அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பெறுமதியான பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் நாளை மத்தியானத்துக்குள் அவர் உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
அதன்பின் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiv2.html
Geen opmerkingen:
Een reactie posten