இரகசிய ஆலோசனையில் முன்னால் இராணுவத் தளபதிகள்
இந்த சந்திப்பில் ஓய்வுபெற்ற இரண்டு மேஜர் ஜெனரல்கள், மற்றும் பிரிகேடியர், கேணல் நிலையில் பணியாற்றிய அதிகாரிகள் குழுவொன்றும் பங்கேற்றுள்ளது. அதிபர் தேர்தல் நாளன்று, கட்சி ஆதரவாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்
எதிரணியின் ஆதரவாளர்கள், ஆளும்கட்சியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. ஐதேக ஆட்சிக்காலத்தில் ஜோன் அமரதுங்க, உள்நாட்டு விவகார அமைச்சராகவும், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவிகளை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/91025.html
மகிந்தரின் மாயாஜாலம்! நிறத்தில் அம்பலம்….
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், நாட்டின் பிறபகுதிகளில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், பேரணிகளில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நீல நிற மேற்சட்டைகளை அணிந்து கொண்டே பங்கேற்று வந்தார்.
ஆனால், வடக்கு, கிழக்கில் அவர் தான் வழக்கமாக அணியும், வெள்ளை நிற தேசிய உடையுடனேயே பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம், முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் நடந்த கூட்டங்களிலும், நேற்று மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் இடம்பெற்ற கூட்டங்களிலும், சிறிலங்கா அதிபர் வெண்ணிற ஆடையுடனேயே பரப்புரையில் ஈடுட்டார்.

http://www.jvpnews.com/srilanka/91028.html
மகிந்தரின் ஆரம்ப விக்கட் வீழ்ந்தது…
ஐக்கிய மக்கள் சுததந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்ரமநாயக தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ரட்ணசிறி விக்ரமநாயக இம்முடிவை எடுத்துள்ளார்.
இவர் கட்சி விலகி பொது எதிரணிக்கு தனது ஆதரவை அளிப்பார் என்று பலராலும் நம்பப்பட்டு வந்த நிலையில் நேற்று இந்த முடிவை எடுத்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/91038.html
Geen opmerkingen:
Een reactie posten