[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 04:14.08 PM GMT ]
இன்றைய தினம் முழங்காவில் மகா வித்தியாலயத்தில் மேற்படி திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.
இதனை கிளிநொச்சி வலயகக்கல்வி பணிமனை ஒழுங்கமைத்து நடத்துகின்றது.
குறிப்பாக இந்த செயற்றிட்டத்தில் 9ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக செயலமர்வு நடத்தப்படுகின்றது.
செயலமர்வில் பேசப்படும் விடயம் என்னவென்றால்,
மஹிந்தோதய கல்வி திட்டம் எவ்வாறானது. அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்ன நோக்கத்திற்காக கொண்டுவந்தார், அதன் மூலம் அடுத்த 5 வருடங்களில் இந்தப் பாடசாலைகள் எவ்வாறு வளர்ச்சியடையும் என்பனவே பேசப்படுகின்றது.
எனவே இது ஒரு அப்பட்டமான தேர்தல் பிரசார நடவடிக்கை என கிளிநொச்சி மாவட்ட கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், க.பொ.த சாதாரண தரம் மற்றும் முன்னோடி பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடசாலைகளாக நடத்தினால், மாணவர்களுடைய நிலை என்ன?
மேலும் மாணவர்களையும் பெற்றோர்களையும் கொண்டு அப்பட்டமான தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் பொறுப்புவாய்ந்த தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmp6.html
வங்கிக் கடன் வழங்குவதாகக் கூறி கண்காணிக்கப்படும் முன்னாள் போராளிகள்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 04:28.04 PM GMT ]
நவம்பர் மாதம் யாழ்.குடாநாடு மட்டுமல்லாமல், வடகிழக்கு மாகாணங்கள் முழுவதும் அதிக கண்காணிப்பு பகுதிகளாக மாற்றப்படும்.
இந்தநிலையில், யாழ்.குடாநாட்டில் முன்னாள் போராளிகளுடைய வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வாளர்கள் தாங்கள் புனர்வாழ்வு அமைச்சிலிருந்து வருவதாக கூறுவதுடன், எங்கிருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், தொலைபேசி இலக்கத்தை மாற்றவேண்டாம்.
மாற்றினால் எமக்கு அறியத்தர வேண்டும் என கூறும் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.
இது குறித்து முன்னாள் போராளிகள் சிலர் தெரிவிக்கையில்,
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் வழங்கப் போவதாக கூறிய வங்கி கடன்களை இன்றுவரையில் வழங்கவில்லை.
ஆனால் மாதத்திற்கு ஒருமுறை எங்கிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? எதற்காக திருமணம் முடிக்காமல் இருக்கிறீர்கள்? எதற்காக இந்த வேலையில் இருக்கிறீர்கள்? தொலைபேசி இலக்கங்களை மாற்ற வேண்டாம் என பல கேள்விகளையும் கட்டளைகளையும் போடுகின்றார்கள்.
சில சமயங்களில் நாங்கள் வெளியில் சென்றிருந்தால், நேரடியாக வீட்டுக்கு போகும் அவர்கள் கடுமையாக விசாரிக்கிறார்கள்.
அதனால் வீட்டில் உள்ளவர்கள் அச்சத்தில் இருக்கின்றார்கள். மேலும் இது நவம்பர் மாதம் என்பதனால் கடுமையான விசாரணைகள் அடிக்கடி நடப்பதுடன், வாழ்வாதார கடன் வழங்கப் போவதாகவும் கூறுக்கின்றார்கள்.
இந்த வாழ்வாதார கடன் வழங்கும் கதை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கதைக்கபடும் பின்னர் அதுபற்றி கதைக்க மாட்டார்கள். இதனால் நாங்கள் உளரீதியாக துன்புறுத்தப்படுகின்றோம் என தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmp7.html
Geen opmerkingen:
Een reactie posten