zondag 16 november 2014

தாய், மகன் வெட்டிக்கொலை! தப்பி ஓடிய 2–வது கணவர்…..

தங்கையை கொன்ற அக்காவின் காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

சேலம் அழாகாபுரன் பெரியபுத்தூர் வன்னியர் நகரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகள் தேஜாஸ்ரீ கடந்த 13ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது மர்மநபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என தேஜாஸ்ரீயின் குடும்பத்தார் கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். இதற்கிடையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடலை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு சேலம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இதற்கென ஒரு தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார்.
ஆரம்பம் முதலே தேஜாஸ்ரீயின் அக்காவான ஹரிணியை காதலித்து வந்த யுகாதித்தனை சந்தேகித்தது காவல்துறை. முதற்கட்டமாக அவரிடம் நடத்திய விசாரணையில் ஹரிணியை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் குடும்பத்தார் பிரித்துவைத்துவிட்டதாகவும் கொலை நடந்த அன்று ஊரில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அதன்பிறகு அவரை காவல்துறையினர் விடுவித்துவிட்டனர்.


ஹரிணியிடம் விசாரித்ததில் திருமணமெல்லாம் நடக்கவில்லை நான் அவனை காதலிக்கவே இல்லையென்று தெரிவித்தார். தேஜாஸ்ரீயின் பள்ளி வேன் டிரைவர் என காவல்துறை பலதரப்பில் விசாரணை நடத்திவந்த போதும் யுகாதித்தனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது காவல்துறை.cilmurder - sister
http://www.jvpnews.com/srilanka/86917.html

தாய், மகன் வெட்டிக்கொலை! தப்பி ஓடிய 2–வது கணவர்….. 

2–வது திருமணம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகர், 61–வது பிளாக்கை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 28). இவருடைய கணவர் மாரிமுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது குணசுந்தரி, தனது 7 வயது மகன் மகேஷ்குமாருடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் நாகவள்ளியுடன் வசித்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜூ (32) என்பவருடன் குணசுந்தரிக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குணசுந்தரி, ராஜூவை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது குணசுந்தரி கர்ப்பமாக இருந்தார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
தாய்–மகன் வெட்டிக்கொலை
நேற்று அதிகாலை வழக்கம்போல கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ, வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி குணசுந்தரியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக இறந்தார்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத ராஜூ, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குணசுந்தரியின் மகன் மகேஷ்குமாரையும் வெட்டிக்கொன்றார். பின்னர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த மாமியார் நாகவள்ளியையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த குணசுந்தரி மற்றும் மகேஷ்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த நாகவள்ளியையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப தகராறில் கொலை
கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தாய்–மகன் கொலை செய்யப்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான குணசுந்தரியின் 2–வது கணவர் ராஜூவை வலைவீசி தேடி வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த இரட்டைக்கொலை நடந்ததா? அல்லது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை ராஜூ கொலை செய்தாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Mother-son
http://www.jvpnews.com/srilanka/86924.html

Geen opmerkingen:

Een reactie posten