zondag 4 augustus 2013

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பாதுகாப்பு கடமைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய பெண்ணின் சடலம் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 07:47.52 AM GMT ]
தூக்கில் தொங்கி இறந்ததாகத் தெரிவிக்கப்படும் குடும்பப் பெண் ஒருவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுதுமலையைச் சேர்ந்த வசந்தராசா விக்கினேஸ்வரி (வயது46) என்பவவே இவ்வாறு தூக்கு மாட்டி இறந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குருநகர் மற்றும் சுன்னாகம் பகுதியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இருவரது சடலங்கள் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பாதுகாப்பு கடமைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 07:55.50 AM GMT ]
யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்பு கடமைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 52 வயதான புத்ததாச என்ற உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றிரவு குறித்த பாடசாலைக்கு பாதுகாப்பு கடமைக்காக சென்றிருந்தார். எந்த காரணத்தினால் அவர் உயிரிழந்தர் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten