கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் எட்டாவது தடவையாகவும் இரண்டு இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
தர்மபுரம் நெத்தலியாற்று பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயமும் அவ் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள அம்பாள் ஆலயமும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதுடன் விக்கிரகங்களுக்கு அடியில் வைக்கப்பட்ட ஐம்பொன்னாலான தகடுகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இவ் ஆலயங்களில் பல தடவைகள் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியாகக பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய போதும் அவர்கள் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் எட்டாவது தடவையாக இவ் ஆலயங்கள் உடைக்கப்பட்டு தகடுகளும் திருடப்பட்டுள்ளன.
எனினும் இச்சம்பவம் மக்கள் மத்தியில் சந்தேகத்தை உண்டாக்கியுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதால் திருடர்கள் இச் செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள் என்றும் வேறு மத ஆலயங்களை அமைப்பதற்கான நடவடிக்கைக்காகவே இச்செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten