dinsdag 6 augustus 2013

சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி


யாழிலில் அரச ஊழியர்களை கட்டாயப்படுத்தி கட்சிப் பத்திரிக்கையை விற்பனை செய்யும் அரசியல் கட்சி
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 03:21.13 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் சமூர்த்தி நியமனம் பெற்றவர்களை கட்டாயப்படுத்தி கட்சிப் பத்திரிக்கை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அரசியல் கட்சியொன்று ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த கட்சியின் மூலம் அண்மையில் அரசாங்கதிணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் தேர்தலை இலக்காகக் கொண்டு பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இவ்வாறு வேலைவாய்ப்பு பெற்றவர்களை கட்டாயப்படுத்தி அவர்கள் பணியாற்றும் அரச அலுவலங்களில் சக பணியாளர்களுக்கும் அலுவலகங்களுக்கு வருகின்றனவர்களுக்கும் தமது கட்சியின் பத்திரிக்கையை விற்பனை செய்கின்றனர்.
இதனால் பலர் விசனமடைந்துள்ளனர். இதேவேளை அரசாங்க சுற்று நிரூபங்களுக்கு விரோதமாக இவர்கள் செயற்பட்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தொடர்பாக உயர் அதிகாரிகளும் மௌனம் காத்து வருகின்றனர்.

குறித்த அரசியல் கட்சியின் பத்திரிக்கையை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்தாலும் பொது மக்கள் வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 06:39.54 AM GMT ]
சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
திருகோணமலை சம்பூரில் 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலையமொன்று அமைக்கப்பட உள்ளது.
இந்திய உதவியுடன் இலங்கை மின்சாரசபை இந்த மின் உற்பத்தி நிலையப் பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
திட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு ஆறு ஆண்டுகளின் பின்னரே இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான இந்தத் திட்டத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்திற்க 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten