[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 12:47.25 AM GMT ]
சுங்கத் தீர்வை கட்டளைச் சட்டத்தின் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான. தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கான பிரேரணையை சமர்பித்து பேசும் போதே அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று 40,000 ரூபா விலையில் குறைவடைந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டே உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலையை நிலையாக தக்கவைத்துக் கொள்வதற்காக 5 வீத இறக்குமதி வரி அறவிடப்பட்டது.
இந்த 5 வீத இறக்குமதி வரிக்கு 100 வீத மேலதிக வரி இடப்படுகிறது. அதாவது தங்கத்துக்கு 2013 ஜூன் 21 ம் திகதி முதல் 10 வீத வரி அமுல்படுத்தப்படுகிறது.
2011ம் ஆண்டு உலக சந்தையில் வெகுவாக தங்கத்தின் விலை குறைந்தது. 2011ல் ஒரு ட்ரோய் அவுன்ஸ் தங்கம் 1900 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அது பின்னர் 1300 டொலராக குறைவடைந்தது.
இது 30 வீத குறைவாகும். எமது நாட்டின் உள்ளூர் சந்தையில் 15 வீதம் குறைவடைந்தது. இந்த நிலை காரணமாக 2012ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தங்கம் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட 136.2 மில்லியன் டொலர்கள் 2013 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஒப்பிடும் போது 200.3 மில்லியன் டொலர்களாக 50 வீத அதிகரிப்பு ஏற்பட்டது.
தங்கத்தின் விலை உலக சந்தையில் அதிகரித்தால் எமது இறக்குமதி செலவில் அதிகரிக்கவும் நேரடியாக வழிவகுக்கிறது. மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயமும் உள்ளது.
உலகில் அதிகளவு தங்கத்தை நுகரும் மக்கள் இருக்கும் நாடாக கருதப்படும் இந்தியாவில் அந்நாட்டு ரூபாவின் மதிப்பும் இப்போது வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை இலங்கையைவிட அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இலங்கையிலிருந்து தங்கத்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது.
தங்கம் இன்று மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. நிதி நிறுவனங்கள், வர்த்தக வங்கிகள் அடகு நிலையங்களில் மக்கள் தங்கத்தை அடகு வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
2013 ம் ஆண்டு மே மாதம் வரையில் 633 பில்லியன் ரூபாவுக்கு தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளது. வர்த்தக வங்கிகளில் 590 பில்லியன் ரூபாவும், நிதி நிறுவனங்களில் 32 பில்லியன் ரூபாவும், அடகு நிலையங்களில் 11 மில்லியன் ரூபாவுமாக அடகு வைக்கப்பட்டுள்ளது.
தயாசிறி அரசாங்கத்துடன் உடன்பாட்டின் அடிப்படையிலேயே இணைந்தார்!- ரணில்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 01:32.48 AM GMT ]
தயாசிறி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் திட்டத்துக்காக கடந்த ஒரு வருடமாக பேச்சு நடத்தியுள்ளதாக ரணில் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் இணைந்தால் அமைச்சுப் பதவி ஒன்றை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் இருந்ததன் காரணமாகவே இந்த உடன்படிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அடிப்படையில் ஜெயசேகரவை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் இணங்கியது என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் செல்வதில்லை என்ற உடன்பாட்டின் கீழேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனினும் அதனை மீறி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக ரணில் சுட்டிக்காட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten