zondag 11 augustus 2013

வெளிநாட்டு உதவியுடன் 2015ற்கு முன்னர் வடக்கில் ஒன்பது மீன்பிடித் துறைகள்!


ஏறாவூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர், செங்கலடியில் சைக்கிள் திருடிய ஒருவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 04:34.13 AM GMT ]
சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் நகரில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை நண்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் எடுத்து வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்தை அடைந்த பொழுது சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய கார்ட் போன்றவற்றையும் தாம் கைப்பற்றியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடியில் சைக்கிள் திருடிய இருவர் கைது

மட்டக்களப்பு செங்கலடி நகரில் இடம்பெற்றுவரும் சைக்கிள் திடுட்டு சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றையே மேற்படி சந்தேக நபர் திருடினார் என சைக்கிளின் உரிமையாளர் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.

சைக்கிளை பறிகொடுத்தவர்களே திருட்டு சந்தேக நபரைப் பிடித்து வந்து பொலிஸில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தாம் எடுத்து வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு உதவியுடன் 2015ற்கு முன்னர் வடக்கில் ஒன்பது மீன்பிடித் துறைகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 03:07.05 AM GMT ]
2015ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் வெளிநாட்டு உதவியுடன் 11 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்.சேந்தாங்குளத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குருநகர் மற்றும் மன்னாரில் பிரான்ஸ் நாட்டின் நிபுணர்கள் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பருத்தித்துறையில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.
நாட்டில் மொத்தமாக 11 மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவற்றில் ஒன்பது மீன்பிடித் துறைமுகங்கள் வடக்கிலேயே அமைக்கப்படவுள்ளன.
இந்த மீன்பிடித் துறைமுகங்கள் மூலம் கடற்றொழில் துறையில் போருக்கு முன்னரான மொத்த தேசிய உற்பத்தியை மீண்டும் வடக்கில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten