donderdag 6 juni 2013

இடம்பெயர்ந்தவர்கள் என்ற போர்வையில் யாழ். மாவட்ட பட்டியலில் அதிக சிங்கள, முஸ்லிம் வாக்காளர்கள்!

மனைவிக்கு தீ வைத்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கணவனுக்கு மரண தண்டனை!
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 01:48.22 AM GMT ]
மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தலவாய் கிராமத்தில் மனைவிக்கு தீ வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது கணவனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தலவாய்க் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 49 வயதான நடராசா சித்திரவேல் என்பவருக்கே இவ்வாறு நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நிதிபதி கே.சிவபாலசுந்தரம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
ஏறாவூர் தலவாய்க் கிராமத்தைச் சேர்ந்த இவருடைய மனைவியான தங்கராசா வனிதாவுக்கும்; இவருக்கும் இடையில் 2007ம் ஆண்டு யூலை மாதம் 15ம் திகதி குடும்பப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இவ்வேளையில் ஆத்திரமடைந்த குறித்த நபரின் மனைவி தான் தற்கொலை செய்யப் போவதாக கணவனை அச்சுறுத்தி தனக்குத்தானே மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குறித்த அவரது கணவன் மனைவிக்கு தீ மூட்டியுள்ளார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மனைவி மீது தீ வைத்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக இணங்காணப்பட்ட இவரை கைது செய்ததாக அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த ஏறாவூர் பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீமன்றத்தில் அவரக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையிலேயே மேற்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்வரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இடம்பெயர்ந்தவர்கள் என்ற போர்வையில் யாழ். மாவட்ட பட்டியலில் அதிக சிங்கள, முஸ்லிம் வாக்காளர்கள்!
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:02.39 AM GMT ]
யாழ். குடாநாட்டின் தமிழர் வாக்குப்பலத்தினை அரசாங்கம் சிதைக்கும் பொருட்டு 1983ல் வசித்ததாக கூறப்படும் சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களை வடமாகாண தேர்தலில் பங்குபற்ற சட்டமூலம் ஏற்பாடு செயதுள்ளது.
இந்த சட்டமூலத்தினை ஜனாதிபதியினால் நியமனம் பெற்றுள்ள உயர் நீதிமன்ற நீதியரசர் மொகான் பீரிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இடம்பெயர்ந்தவர்கள் முன்னர் இருந்த இடத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதோடு இரண்டு இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டமூலத்தின் மூலம் சுமார் எண்பதாயிரம் கள்ள வாக்காளர்கள் வட மாகாணசபை தேர்தலுக்கு முன்பாக இணைத்துக்கொள்ளப்படுவர்.
இதேவேளை இந்த சட்டமூலம் இடம்பெயர்ந்து அயல் நாடுகளுக்கு தப்பி ஓடிய தமிழர்களின் வாக்குகளை கவனத்தில் கொள்ளாது.
ஆகவே தமிழர்களின் வாக்குகள் குறையவும், சிங்கள முஸ்லிம்களின் வாக்குகள் அதிகரிக்கவும் இந்த சட்டமூலம் அமையும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten