donderdag 6 juni 2013

இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் 22 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர!– கரு ஜயசூரிய

இந்திய உயர்ஸ்தானிகரத்தை நீக்குவது குறித்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:47.02 AM GMT ]
இலங்கையில் இருந்து இந்திய உயர்ஸ்தானிகரத்தை நீக்குவது தொடர்பில் சென்னை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் எம் சோலைக்கண்ணுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமை விடயங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இலங்கை தூதரகத்தை நீக்க வேண்டும் என்று சோலைக்கண்ணு ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தார்.
எனினும் அந்த மனு கடந்த மார்ச் மாதம் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த தடையை ஏற்படுத்த முடியாமைக்கான காரணத்தை ஆராய்வதற்கான மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறிப்பாக தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில், இந்திய உயர்ஸ்தானிகரத்தை ஏன் இலங்கையில் இருந்து நீக்க முடியாது என்று மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஆராயப்பட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.
மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், இது தொடர்பான தீர்மானத்தை கால வரையறை இன்றி ஒத்தி வைத்தனர். 

இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் 22 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர!– கரு ஜயசூரிய
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 02:34.51 AM GMT ]
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் 22 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
நாட்டில் சுதந்திரமான ஊடக முறைமை காணப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம்.
அரசியல் அழுத்தங்களுக்கு எதிராக ஊடகவியலாளர்களினால் குரல் கொடுக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.
அரச ஊடகங்கள் பக்கச்சார்பான அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன.
வடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten