| பிரான்ஸின் ‘காடு’ என வர்ணிக்கப்படுகின்ற கலே அகதி முகாமில் உள்ள அகதிகளுக்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, லண்டனில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்க கிழமை) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இனவெறி ஒழிப்புக்கு அழைப்பு விடுக்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பிய ஆர்ப்ப்hட்டக்காரர்கள், பேரணியாகச் சென்றனர். கலே அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதேவேளை கலேயிலுள்ள 3 ஆயிரம் ஆதரவற்ற சிறுவர்களுக்கு அடைக்கலம் வழங்க பிரபுக்கள் சபை தாக்கல் செய்ய திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தார்கள்! |
| 16 Oct 2016 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1476606949&archive=&start_from=&ucat=1& |
Geen opmerkingen:
Een reactie posten