தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 december 2014

எதிர்காலத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்! அரசியலுக்கு வரமாட்டேன்: சிராணி பண்டார நாயக்க


கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நாடு இலங்கை: ஹர்ஸ டி சில்வா
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 07:23.13 AM GMT ]
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நாடு இது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி உருவாகும் அரசாங்கத்தின் ஊடாக அம்பலப்படுத்தப்படும்.
அனைத்து ஊழல் மோசடிகாரர்களின் தகவல்களும் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படும்.  இந்த தகவல்கள் நீதிமன்றிடம் முன்வைக்கப்படும்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல இடமளிக்கப்பட மாட்டாது.
தப்பிச் செல்லும் கள்வர்களை கைது செய்வோம். பொறுப்புடன் கூறுகின்றோம், இவர்கள் பற்றிய ஆவணங்கள் என்னிடம் உண்டு.
சிலர் மரீனா, சென் கீட்ஸ் போன்ற நாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ளனர்.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நாடு இது. களவாடப்பட்ட பணம் சீசெல்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
தகவல்கள் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்படும. மக்களும் அவற்றை பார்வையிட முடியும் என ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamv1.html


பிள்ளையான் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஐ.தே.கட்சியில் இணைந்தார்!
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 07:48.46 AM GMT ]
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரான கணபதிபிள்ளை மோகன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரான அவர் கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவி வகித்ததுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.
நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மோகன் கூறினார்.
நீண்டகாலமாக பாரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்ததாகவும் ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை எனவும் அதனால் ஏற்பட்ட விரக்தியால் தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவர் அண்மையில் பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்டு பின்னர் பொலிஸ் அதிகாரியின் அழுத்தத்தினால் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamv4.html


எதிர்காலத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்! அரசியலுக்கு வரமாட்டேன்: சிராணி பண்டார நாயக்க
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 07:43.21 AM GMT ]
நான் 31 வருடங்கள் நீதிபதியாகவும் அதில் 16 வருடங்கள் பிரதம நீதியரசராகவும் கடமையாற்றியுள்ள நிலையிலேயே எனக்கு இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீதி கிடைகும் என நம்புகிறேன் என பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்காலத்தில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நான் அரசியல்வாதியல்ல. அரசியலுக்கு வரும் எண்ணமும் எனக்கில்லை.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவருக்கு எதிராக தொடர்ந்திருக்கும் வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து, புதுக்கடை வளாகத்தில் இருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே சிராணி பண்டாரநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய வங்கி அறிக்கை இன்றும் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படாத நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி கிஹான் பிலபிட்டிய அறிவித்தார்.
நான் 31 வருடங்கள் நீதிபதியாகவும் அதில் 16 வருடங்கள் பிரதம நீதியரசராகவும் கடமையாற்றியுள்ள நிலையிலேயே எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2013 ஜனவரி 13ஆம் திகதியில் இருந்து எனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
சர்வதேச நீதித்துறைசார் அமைப்புக்கள் எனக்கு ஆதரவாக இதுவரை மூன்று அறிக்கைகளைவிட்டும் கூட எனக்கான நெருக்குதல்கள் இதுவரை குறையவில்லை எனவும் சிராணி பண்டாரநாயக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamv3.html

Geen opmerkingen:

Een reactie posten