donderdag 18 december 2014

மைத்திரிபாலவின் அனுமதியின்றி பேச்சை ஒளிபரப்ப ஊடகங்களுக்குத் தடை!

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முடிவு? தம்புள்ளை, கிராண்ட்பாஸ் பள்ளி விவகாரங்களுக்கு தீர்வாம்
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 06:37.08 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் சிரேஷ்ட அமைச்­சர்­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் முன்­னேற்றம் காணப்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து முஸ்லிம் காங்­கிரஸ் ஜனா­தி­பதி
தேர்­தலில் மஹிந்த ராஜபக்சவுக்கே ஆத­ரவு வழங்கும் சாத்­தியம் உரு­வா­கி­யுள்­ளது.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம் ஜயந்த மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது அரசு முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்க முன்வந்துள்ளது.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் பிரச்சினை, கிராண்ட்பாஸ் ஜும் ஆ பள்ளிவாசல் பிரச்சினை மற்றும் கரையோர நிர்வாகம் என்பனவற்றின் தீர்வுகளுக்கு அரசு சாதகமான சமிக்ஞைகளை வழங்கியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரைகளையும் விடுத்துள்ளது.
பல வருடங்களாக தீர்வின்றி நீடித்து வரும் தம்புள்ளை பள்ளிவாசல் வீதி அபிவிருத்திக்கு தடையாக இருப்பதால் பள்ளிவாசல் தற்போது அமைந்துள்ள இடத்துக்கு அருகில் 40 பேர்ச் காணியொன்றினை இனம் காணும்படி அரசு அமைச்சர் ஹக்கீமை கோரியுள்ளது. இனம் காணும் காணியில் பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
பள்ளிவாசலுக்கு புதிய காணியொன்றினை இனம் காணுவதற்காக அமைச்சர் ஹக்கீம் நாளை வெள்ளிக்கிழமை தம்புள்ளை பள்ளிவாசலுக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை ஜும்ஆ தொழுகையின் பின்பு அமைச்சர் பள்ளிவாசல் நிர்வாக சபையைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி புதிய காணியொன்றினை இனம் காணவுள்ளார்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினையும் தீர்த்து வைக்க அரசு இணங்கியுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். கிராண்ட்பாஸ் பழைய பள்ளிவாசலிலும் புதிதாக திறந்து வைக்கப்பட்டு பின்பு மூடப்பட்ட பள்ளிவாசல்களிலும் தொழுகைகள் இடம்பெறாமலிருப்பதை அமைச்சர் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டி கவலை தெரிவித்தார்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினையின் போது புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பழைய பள்ளிவாசலை மாடிக்கட்டிடமாக நிர்மணித்து தருவதாக உறுதியளிக்கப்பட்டாலும் அது நிறைவேற்றப்படவில்லை என்பதையும் விபரித்தார்.
இதனையடுத்து நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச தரப்பினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் வகையில் கரையோர நிர்வாக முறையொன்றினை அமுல்நடத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய இன்றைய கள நிலைமைக்குச் சாதகமான தீர்வொன்றினை பெற்றுக்கொள்வதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்ற விளக்கமும் அமைச்சர்களிடம் முன்வைக்கப்பட்டன. முஸ்லிம்கள் தமது நிர்வாக தேவைகளுக்காக அம்பாறைக்கு செல்வதில் உள்ள சிரமங்கள் ரவூப் ஹக்கீமினால் தெளிவுபடுத்தப்பட்டன.
மேற்குறிப்பிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளே ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்காக மக்கள் மத்தியில் சந்தைப்படுத்தக் கூடியதாக இருக்கும். தீர்வுகள் வழங்கப்பட்டால் மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டுவது மிகவும் இலகுவாக இருக்கும் மக்களும் ஆதரவு வழங்குவார்கள்.
அரசினால் வழங்கப்பட்டுள்ள ஏனைய சிறு பிரச்சினைக்கான தீர்வுகள் அரசினால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளாகும். அந்த தீர்வுகள் மக்கள் மத்தியில் ஒரு உறுதியான தோற்றப்பாட்டை ஏற்படுத்தாது என்பதையும் அமைச்சர் ஹக்கீம் உறுதியாக தெரிவித்தார்.
இதேவேளை, பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவினை கோரியுள்ளார். அவரும் பல உறுதி மொழிகளை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கடந்த திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கட்சியின் அனுமதியின்றி இரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மறுதினம் அதிகாலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றிருந்தாலும், ஜனாதிபதியைச் சந்தித்த விபரத்தை அவர் தலைவரிடம் கூறவில்லை.
என்றாலும் ஹரீஸ் எம்.பி. ஜனாதிபதியைச் சந்தித்த தினம் இரவே இது அமைச்சரின் காதுகளுக்கு எட்டியிருந்தது. ஜனாதிபதியை தனியாக சந்தித்தீர்கள் அல்லவா? என அமைச்சர் அவரிடம் வினவிய போது அவர் அதற்கு ஆம் என பதிலளித்தார்.
ஹரீஸ் எம்.பி.யின் நிலைப்பாடு பற்றி அவரிடம் வினவிய போது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. தலைவர் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு எனது பூரண ஆதரவினை வழங்குவேன் என்றார்.
முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியிலோ குழுவாகவோ அரசியல் ரீதியாக எவரையும் சந்திக்க கூடாதென கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பைஅத் செய்துள்ளதை அவர் நினைவூட்டியுள்ளார்.
மேலதிக இணைப்புமகிந்தவா ? மைத்திரியா? முஸ்லிம் காங்கிரஸின் முடிவு நாளை மறுதினம்
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது தொடர்பான முடிவை நானை மறுதினம் அறிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் சிரேஷட் தலைவர்களுடன் ஒன்றினைந்து முடிவெடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து முடிவெடுப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக ஒரு குழுவினரும் பொது வேட்பாளர் மைத்திரபாலவிற்கு ஆதரவு வழங்கபோவதாக மற்றோரு குழுவும் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம் பெறுவுள்ள கலந்துரையாடலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியான முடிவை வெளியிடும்.
மேலும் யாருக்கு ஆதரவு வழங்க போவது குறித்து இம்மாதம் இறுதிக்கு முதல் முடிவை வெளியிடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCScKalr1.html
மைத்திரிபாலவின் அனுமதியின்றி பேச்சை ஒளிபரப்ப ஊடகங்களுக்குத் தடை!
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 06:52.40 AM GMT ]
வேட்பாளரின் அனுமதியின்றி அவரது முன்னைய கருத்துக்களை, மற்றைய வேட்பாளரின் பிரச்சாரத்துக்கு விளம்பரமாகப் பயன்படுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் அரசியல்வாதி ஒருவரினால் வேறு ஒரு அபேட்சகர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மற்ற வேட்பாளரின் பிரச்சாரத்துக்காகவோ, விளம்பரத்துக்காகவோ பயன்படுத்துவதாயின் தொடர்புபட்ட அரசியல்வாதியின் அனுமதியுடனேயே அது இடம்பெற வேண்டும்.
கருத்து வெளியிட்டவரின் அனுமதியின்றி வெளியிட வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்த போது அமைச்சராக இருந்து பேசிய கருத்துக்களில் சிலவற்றை தெரிவு செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரத்துக்கு விளம்பரமாக பயன்படுத்துவதனை நிறுத்துமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதனையடுத்து இந்த அறிவிப்பை ஆணையாளர் ஊடகங்களுக்கு விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalr3.html

Geen opmerkingen:

Een reactie posten