vrijdag 14 november 2014

மீனவர்களின் மரண தண்டனை தீர்ப்பால் இந்தியர்கள் கோபமடைந்துள்ளனர்: வெங்கையா நாயுடு!

மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல்! விசாரணைக்கும் நீதிமன்றம் ஏற்பு
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 06:31.59 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒன்றை நடத்த முடியாது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த நீதிபதி வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார்.
அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணையை நடத்த முடியாது என்றாலும், அவர் நிதியமைச்சராகவும் செயற்படுவதால், நிதியமைச்சர் என்ற வகையில் அவரையும் வழக்கில் சேர்க்க முடியும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
கோல்டன் கீ நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்ததனால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தின் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவி துஷாந்தி ஹபுகொட தெரிவித்தார்.
2008ம் ஆண்டு கோல்டன் கீ நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி மோசடி காரணமாக அங்கு பணத்தை வைப்புச் செய்த சுமார் 9000 க்கும் அதிகமானோருக்கு 2600 கோடி ரூபாவுக்கு அதிகமான பண இழப்பு ஏற்பட்டதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அந்த வழக்கில் ஜனாதிபதியையும் பிரதிவாதியாக சேர்த்திருப்பது, அரசியல்யாப்பின் 35 வது பிரிவின் கீழ் தவறு என்று எதிர்தரப்பு சட்டத்தரணி வாதிட்டார். ஆகவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் கோரினார்.
ஆனால், அந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, அரசியல்யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்ற போதிலும், அவர் நிதியமைச்சராகவும் பணிபுரிவதால், நிதியமைச்சர் என்ற வகையில் அவருக்கு எதிராக வழக்கை விசாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlp2.html
மீனவர்களின் மரண தண்டனை தீர்ப்பால் இந்தியர்கள் கோபமடைந்துள்ளனர்: வெங்கையா நாயுடு
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 06:03.16 AM GMT ]
இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள 5 இந்திய மீனவர்களும் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடவில்லை என்று பா.ஜ.கட்சியின் முக்கியஸ்தரும் ,அமைச்சருமான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த 5 மீனவர்களையும் காப்பாற்ற மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 இந்திய மீனவர்களுக்கும் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டமையானது அதிர்ச்சியளிக்கும் செயல் என்று இலங்கையின் அமைச்சர் ஒருவரிடம் தாம் சியோலில் வைத்து தெரிவித்ததாக நாயுடு கூறினார்.
இந்த தீர்ப்பினால் இந்தியர்கள் கோபமடைந்துள்ளமையையும் தாம் இலங்கை அமைச்சருக்கு தெரிவித்ததாக மேலும் குறிப்பிட்டார். 
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlpz.html

Geen opmerkingen:

Een reactie posten