dinsdag 11 november 2014

இந்தியாவுக்கு ஆயுத விற்பனை விவகாரம்! பதிலளிக்குமாறு கோத்தபாயவுக்கு சபாநாயகர் உத்தரவு

50 மில்லியன் ரூபாய் தருவதாக அரசாங்கம் பேரம் பேசியது: நடிகர் நலீன் பிரதீப்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 04:27.51 PM GMT ]
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்முதல் கட்டமாக தம்மை 50 மில்லியன் ரூபாய்களுக்கு விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்தாக மேல் மாகாண சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் நடிகருமான நளின் பிரதீப் உடவல குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் தமது முழுக்குடும்பத்துக்கும் கனேடிய, அவுஸ்திரேலிய அல்லது நெதர்லாந்து பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உறுதியளித்தாக உடவல குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
உடவல, இலங்கையின் பிரசித்தி பெற்ற தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகராவார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt2.html


தங்க நகைத் திருட்டு: இலங்கைப் பெண்ணுக்கு டுபாயில் சிறை
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 04:39.34 PM GMT ]
தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை பணிப்பெண்ணுக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றம் மூன்று மாத சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
அத்துடன் சிறைத்தண்டனை காலம் முடிவடைந்ததும் அவரை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த பெண்ணை டுபாயின் வேலை கொள்பவர் ஒருவர் தமது வயதான தாயை கவனிப்பதற்காக வேலையில் இணைத்துக் கொண்டார்.
எனினும் மூன்று மாதங்களாக குறித்த வீட்டில் பணியாற்றிய இலங்கைப் பெண், கடந்த ஜூன் மாதத்தில் திடீரென்று காணாமல் போனார்.
இதன்போதே தமது தாய் மற்றும் சகோதரிகளின் நகைகள் காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டதாக வேலை கொள்பவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
இதன்பின்னர் குறித்த இலங்கைப் பெண், காணாமல் போன நகைகளின் ஒரு தொகுதியுடன் கைது செய்யப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt3.html


இந்தியாவுக்கு ஆயுத விற்பனை விவகாரம்! பதிலளிக்குமாறு கோத்தபாயவுக்கு சபாநாயகர் உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 11:16.42 PM GMT ]
இந்தியா, இலங்கையிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததா? என்ற கேள்விக்கு உடன் பதிலளிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு  சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோளை இந்தக் கேள்வியை நாடாளுமன்றில் எழுப்பியிருந்தார். எனினும்,  இந்தக் கேள்விக்கு பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்திருக்கவில்லை.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் லோக்சபாவில் குறிப்பிட்டதனைப் போன்று இந்தியா, இலங்கையிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதா? அவ்வாறு கொள்வனவு செய்திருந்தால் எப்போது கொள்வனவு செய்யப்பட்டது? என்ன ரக வாகனம் கொள்வனவு செய்யப்பட்டது? விற்பனையின் ஊடாக கிடைக்கப் பெற்ற வருமானம்? இந்தக் கொடுக்கல் வாங்கலின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் அறிக்கை என்பனவற்றை சமர்ப்பிக்குமாறு தலதா அதுகோரளை கோரியிருந்தார்.
பிரதமர் மற்றும் பௌத்த சாசன அமைச்சரான டி.எம். ஜயரட்னவிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க ஒரு மாத கால அவகாசம் தேவை என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
சபாநாயகர் அவர்களே!
 இந்தக் கேள்விகளை எழுப்பி பதினொரு மாதங்கள் ஆகின்றன. இன்று நான்காவது தடவையாகவும் கால அவகாசம் வழங்குமாறு கோரப்படுகின்றது. ஏன் இவ்வாறு செய்கின்றார்கள்.
இது நிர்மலமான பௌத்த நாடாகும். அதன் காரணமாகவா ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி பதிலளிக்கவில்லை?” என தலதா அதுகோரளை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்மலமான பௌத்த நாடாகும். பௌத்த மாதம் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. புத்தபிரான் பிறந்த இந்தியாவுடன் பகைமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தக் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt4.html

Geen opmerkingen:

Een reactie posten