donderdag 13 november 2014

டெல்லி சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அசத்தும் அமெரிக்க சிறுவன்….

16 வயது மாணவியை மிருகத்தனமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி, அடித்து, உயிருக்கு போராடிய நிலையில் விறைப்பான ஆற்றில் விடப்பட்ட கொடூரம்?

கனடா- வினிபெக்கில் ஒரு 20-வயது மனிதனும் 17-வயது இளைஞனும் சேர்ந்து 16-வயது பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து அடித்ததோடு அவளை ஆற்றில் எறிந்தது மட்டுமன்றி அவள் கரையை அடைந்த போது மீண்டும் மோசமாக அடித்து ஆற்றோரத்தில் விட்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை காலை 7-மணியளவில் அவ்வழியால் சென்ற வழிப்போக்கர் ஒருவர் சுயநினைவின்றி கிடந்த 16-வயதுடைய றினெலி ஹாப்பர் என்ற பெண்ணை கண்டிராவிட்டால் அவள் இறந்திருப்பாள் என பொலிசார் கூறினர்.
அற்புதகரமாக ஹாப்பர் தற்சமயம் குணமடைந்து வருகின்றாள்.
ஹாப்பரின் பெற்றோர்களின் அனுமதியுடன் பாலியல் துன்புறுத்தலினால் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடும் ஓர் அரிய நடவடிக்கையை பொலிசார் எடுத்தனர்– வழக்கின் கவனத்தை மேலும் ஈர்ப்பதற்கும் தாக்கியவர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன்.
இந்த அசைவு பலனளித்துள்ளதென பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு சந்தேக நபர்களும், ஹாப்பர் அவளது சினேகிதிகளிடமிருந்து நடு இரவு நேரத்தில் விடுபட்ட பின்னர் அவளுடன் உரையாடத் தொடங்கியுள்ளனர். அவளும் சந்தேக நபர்களுடன் அவர்கள் மிட்ரவுன் பாலத்தின் அடியில் அவளை திருப்பி பாலாத்காரம் செய்யும் வரை ஆற்றங்கரை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்ததாகவும் புலன்விசாரனையில் இருந்து வெளியானதென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பலாத்காரம் செய்த பின்னர் அவளை ஆற்றில் எறிந்துள்ளனர். ஹாப்பர் மிதந்து பாலத்தின் கிழக்கு பகுதியை அடைந்துள்ளாள்.
குறைந்த பட்ச ஆடைகளுடன் ஈரம் சொட்டிய நிலையில் மீண்டும் சந்தேக நபர்களின் பார்வையில் அகப்பட அக்கொடிய சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தாக்கியுள்ளனர். இம்முறை ஆயதமொன்றினால் தாக்கி சாகும் படி விட்டுச்சென்றனரென பொலிசார் கூறினர்.
அவ்விடத்தை விட்டு அகன்ற இரு சந்தேக நபர்களும் சனிக்கிழமை அதிகாலை 2.30-மணியளவில் 23-வயதுடைய பெண் ஒருவரை அடித்தும் பாலியல் பலாத்காரம் செய்துமுள்ளனர்.
சந்தேக நபர்களை பொலிசார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
ஜஸ்ரின் ஜேம்ஸ் ஹட்சன் 20-வயது மற்றும் 17-வயது ஆண் இருவர் மீதும் கொலை முயற்சி, மோசமான பாலியல் தாக்குதல், ஆயுதத்துடன் கூடிய பாலியல் பலாத்காரம் செய்தமை போன்ற குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டுள்ளன.
teenteen1
 - See more at: http://www.canadamirror.com/canada/33936.html#sthash.QWlKRs7W.dpuf

உலக வர்த்தக மையத்தின் 69-வது மாடியில் 2- மணித்தியாலங்கள் தொங்கிய இரண்டு ஜன்னல் சுத்தம் செய்பவர்கள் வியத்தகு முறையில் காப்பாற்றப் பட்டனர்!.

அமெரிக்கா- நியு யோர்க் உலக வர்த்தக மையத்தின் 69-வது மாடியில் ஜன்னல் சுத்தம் செய்து கொண்டிருந்த இருவர் ஒரு உடைந்த மேடைக்குள் அகப்பட்டு கொண்டதால் இரண்டு மணித்தியாலங்கள் வரை தொங்கிக் கொண்டிருந்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை பிற்பகல் நடந்துள்ளது.

மீட்பு பணியாளர்கள் இருவரையும் இழுத்து எடுத்தனர். மீட்கப்பட்டவர்களில் ஒருவர் ஜூவான் லோபஸ் எனவும் 5-வருடங்களாக ஜன்னல் சுத்தம் செய்யும் தொழிலில் உள்ளவர் எனவும் ஜூவான் லிசாமா 14-வருடங்களாக இத்தொழில் செய்து வருகின்றார் எனவும் கூறப்பட்டுள்ளது.
68-வது மாடியில் உள்ள ஒரு யன்னலை உடைத்து  தொங்கிக் கொண்டிருந்த இருவரையும் வெளியே எடுத்துள்ளனர்.
இருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
யன்னல் சுத்தம் செய்பவர்கள் கடந்த சில நாட்களாக யன்னல் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். கட்டுமானப் பணிகள் முடிவடைந்து கட்டிடம் பாவனைக்கு ஆயத்தமான நிலையில் உள்ளது.
தீயணைப்பு திணைக்களத்தின் அணுகு முறையினால் இருவரும் பாதுகாப்பாக யன்னலூடாக வெளியே கொண்டுவரப்பட்டனர்.
tower4
tower1tower2 tower5tower6tower7 tower10 tower14
 - See more at: http://www.canadamirror.com/canada/33941.html#sthash.2juQW9wG.dpuf

டெல்லி சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அசத்தும் அமெரிக்க சிறுவன்….

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான மனோ பால் தனது 8 வயது மகன் ரூபென் பாலுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகனுக்கு ஆறரை வயதில் கணினி மொழிகளை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் மனோ பால். முதலில் ‘சி’ புரோகிராமிங்கை கற்றுக்கொண்ட ரூபென் தற்போது ஆப்பிள் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்முக்குண்டான ‘ஸ்விப்ட்’ புரோகிராமிங்கை கற்று வருகிறார்.

தனது புராஜெக்ட்களை தானே வடிவமைத்துக்கொள்வதாக கூறியுள்ள ரூபெனை கணினி துறையின் மேதை என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த ஆகஸ்டு மாதம் புருடென்ட் கேம்ஸ் என்ற கணினி தொடர்பான விளையாட்டு நிறுவனத்தை தொடங்கிய ரூபென், அதன் சி.இ.ஓ.வாகவும் பதவி வகித்து வருகிறார். அவரது தந்தை மனோ பால் இந்நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நடைபெறும் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ரூபென் பங்கேற்று விரிவுரையாற்ற உள்ளார். அப்போது, தற்போதைய சந்ததியினருக்கு சைபர் பாதுகாப்பு திறமையின் அவசியம் குறித்தும், அதில் அவர்களை வளர்ச்சியடைய வைப்பது குறித்தும் அவர் பேச உள்ளார். இம்மாநாட்டில் மத்திய மந்திரி வி.கே.சிங். சிறப்புரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
usa-studn- See more at: http://www.canadamirror.com/canada/33958.html#sthash.OAwpQF2V.dpuf

Geen opmerkingen:

Een reactie posten