யாழில் சிறுமியை வதைத்த தாய் மற்றும் சிறிய தந்தை
இதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சந்கேநபர்களை கைது செய்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்http://www.jvpnews.com/srilanka/86525.html
திருமலையை அதிர வைக்கும் மனைவியைக் கொன்று தூக்கிலிட்ட கணவன்
திருகோணமலை நகர் பகுதியிலுள்ள கேபிள் அலைவரிசை உரிமையாளரின் மகனான பிரியதர்ஷன் உயிரிழந்தவரின் தாய்க்கு முதலாம் திகதி அதிகாலை 05:15 மணியளவில் கையடக்கத்தொலைபேசியில் அழைப்பு விடுத்து அம்பு என்று அழைக்கப்படும் கஜேந்தினி சண்டை பிடிக்கின்றாள். வந்து பாருங்கள் என கூறியதையடுத்து நான் இடியப்பம் அவிக்கின்றேன் என கூறியதுடன் நான் இப்ப வருகின்றேன் என கஜேந்தினியின் தாய் கூறியதாகவும் தெரிவித்தார்.அப்போது அவர் வீட்டுக்கு முன்னால் டிப்பர் வாகனத்தில் வந்து என்னை அழைத்து சென்றார்.
அழைத்து செல்லும் வழியில் கஜேந்தினி ஏதும் செய்திருந்தால் நான் ஏதோ செய்து விட்டேன் என கூறினால் உங்களுடைய மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவேன் என கூறியதாகவும் தாய் அழுத வண்ணம் குறிப்பிட்டார்.
வீட்டுக்கு சென்று பார்த்த போது மேல் மாடியிலிருந்து தூக்கிக் கொண்டு வந்தார். அதனையடுத்து திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவுடன் உடனே அவர் வைத்தியசாலையை விட்டு சென்று விட்டதாகவும் தாய் கூறியதுடன் மனைவியான கஜேந்தினியை கொன்றது கணவர் பிரியதர்ஷன் (கண்ணன்) தான் எனவும் குறிப்பிடுகின்றார்.
மனைவி ஏதோ ஒரு விதத்தில் தூக்கில் தொங்கி மயங்கி கிடக்கின்றார் என நினைத்துக் கொண்டு அருகில் நின்றிருந்தால் உண்மையாகவே மகள் தூக்குத் தான் போட்டிருப்பாள் என கூற முடியும். ஆனாலும் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போதும் பயமுறுத்தியதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கும் நேரத்தில் பயந்து தப்பி ஓடியது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
துாக்கில் தொங்கவிடப்பட்ட வேளையில் அவரது கணவர் ராமதாஸ் பியதர்ஷசன் (கண்ணா) மற்றும் கணவரின் சகோதரி அவரது குடும்பத்தினர் மற்றும் வேலைக்காரி ஆகியோர் வீ்ட்டில் இருந்தனர் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
மனைவியை கொலை செய்து துாக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் மனைவியின் தாய் வீட்டுக்குச் சென்று தாயை டிப்பரில் அழைத்துச் செல்லும் போது உன்னுடைய மகள் செத்திருந்தால் வெளியில் யாரிடமும் சொன்னால் உன்னுடைய ஏனைய மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவேன் என மிரட்டினார் எனவும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் பொலிசாரிடம் தெரிவித்தார்.
அத்துடன் வைத்திய பரிசோதனை நிறைவடைந்த வேளையில் மரணமடைந்த பெண்ணின் சார்பில் எதுவித வாக்கு மூலங்களையும் பொலிஸார் பெறவில்லை. கொலை செய்தவன் சார்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ஏதோ சிங்களத்தில் எழுதி கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாரிடம் கையொப்பம் பெற்றிருந்தனர்.
தாயார் ஏனைய பிள்ளைகளை கொலை செய்து விடுவார் என பயந்து உண்மையை யாரிடமும் சொல்லவில்லை. மரணமடைந்த மனைவியின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுக்கு கணவர் தமது கடமைகளை செய்ய வேண்டும் என அவரை அழைத்து வந்த போது அவர் கிரியைகள் எதுவும் செய்யாமல் இறந்த மனைவியின் கழுத்தில் இருந்த தாலிக் கொடியை அறுத்து விட்டு ஓடியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten