zaterdag 22 november 2014

எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு பெயர்: அபே ஜாதிக பெரமுண



அமைதிக்காக்கும் அமைச்சர் தினேஷ் குணவர்தன
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 10:31.34 AM GMT ]
ராஜபக்ஷவினரை பாதுகாப்பதற்காக அண்மைய காலமாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கடும் சொல்தாக்குல்களை தொடுத்து வந்த அமைச்சர் தினேஷ் குணவர்தன தற்போது அமைதியாக இருப்பது பாரதூரமான சிக்கலுக்குரியது என ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களில் கூட தற்போது தோன்றுவதில்லை.
ஜாதிக ஹெல உறுமயவின் உதய கம்மன்பில மேல் மாகாண சபையில் வகித்து வந்த அமைச்சர் பதவியை மக்கள் ஐக்கிய முன்னணியின் சலோச்சன கமகேவுக்கு வழங்குமாறு தினேஷ் குணவர்தன சில தினங்களுக்கு முன் கடும் கோரிக்கையை முன்வைத்திருந்தாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
அத்துடன் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து தேசப்பற்றுள்ள அமைப்புகளின் ஒன்றியம் நடத்திய மாநாட்டில் சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்த போதிலும் சம்பிக்கவும் தினேஷூம் அதில் கலந்து கொள்ளவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgrz.html

பசுமைத்தேசம் விதை தானியங்கள் கிளிநொச்சி பிரமந்தானாறு மக்களின் கைகளில்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 09:45.47 AM GMT ]
யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் எண்ணத்திற்கமைய பசுமைத்தேசம் வீட்டுக்கொரு விளைச்சல் மண்ணை நம்பும் மகத்தான முயற்சி என்ற திட்டத்தின் கீழ் சாந்தபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பிரமந்தனாறு கிராமத்திலும் நடைபெற்றது.
பிரமந்தனாறு விவசாய அமைப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தலைவர் குகராசா, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தவபாலன், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் கிளநொச்சி மாவட்டத்தின் உப தலைவருமான பொன்.காந்தன் பிரமந்தனாறு மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரநிதிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
மழை பெய்து வருகின்ற நிலையில் வறட்சியால் அழிந்துபோன தம் வீட்டுத்தோட்டங்களை உயிர்ப்பிக்க பசுமைத்தேசம் விதை தானியங்கள் ஆதாரமாக அமையுமென மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgq7.html
எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு பெயர்: அபே ஜாதிக பெரமுண
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 10:07.27 AM GMT ]
எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு அபே ஜாதிக பெரமுண என்று பெயர் வைக்க இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கலந்துரையாடலின் போது சுமார் பத்து பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட போதிலும் அபே ஜாதிக பெரமுண என்ற பெயர் பொருத்தமான இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
தற்போதைக்கு சின்னம் தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் நடைபெறுகின்றது.
பெரும்பாலும் ஏழை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னங்களில் ஒன்றே எதிர்க்கட்சிகளின் பொதுச்சின்னமாக அறிவிக்கப்படலாம் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgry.html

Geen opmerkingen:

Een reactie posten