dinsdag 18 november 2014

ஹெல உறுமய விலகியதனால் தேர்தலுக்குப் பாதிப்பு இல்லை: அமைச்சர் கெஹெலிய

இலங்கையில் ஜனாதிபதியாகின்ற தகுதி இருவருக்கே உள்ளது!– ஞானசார தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 03:07.41 PM GMT ]
இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ளவர்கள் இருவரே உள்ளனர். அந்த இருவரும் எம்முடனே உள்ளனர் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இன்றுள்ள வேட்பாளர்களுக்கு, தலையிருந்தால், முதுகெலும்பில்லை. முதுகெலும்புள்ளவர்களுக்கு தலையில்லை.
எம்மிடமுள்ள இருவருக்கு மட்டுமே இந்த இரண்டும் உள்ளதாகவும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேரர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjw6.html
பொன்சேகாவைப் போன்று ஹெல உறுமயவும் சதி வலையில்: தேசிய சுதந்திர முன்னணி
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 04:27.00 PM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவைப் போன்று ஜாதிக ஹெல உறுமய கட்சியும் சதி வலையில் சிக்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் கீர்த்தி நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். அதன் பின்னர் அவர் தூக்கி எறியப்பட்டார்.
இதேபோன்றதொரு சதி வலையில் ஜாதிக ஹெல உறுமயவும் சிக்கியுள்ளது.
2005, 2010ம் ஆண்டை விடவும் பலமான ஆவேசம் கொண்ட எதிரிகளே இந்த சதி வலைகளை பின்னுகின்றனர்.
தேசிய அமைப்புக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த சதியில் தேசியவாத சக்திகள் சிக்கிவிடக் கூடாது.
ஜாதிக ஹெல உறுமய எடுத்த தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள இன்னமும் காலம் இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjw7.html
ஹெல உறுமய விலகியதனால் தேர்தலுக்குப் பாதிப்பு இல்லை: அமைச்சர் கெஹெலிய
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 04:45.34 PM GMT ]
ஹெல உறுமய கட்சி விலகியதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் கதவு திறந்தேயுள்ளது. யாரும் வரலாம் போகலாம்.
எது எவ்வாறிருந்தாலும், கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடிமகனும் ஜனாதிபதியுடனேயே உள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தத்தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், அரசாங்கத்துடன் உள்ள சகல உறவுகளையும் முறித்துக் கொள்வதாக இன்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjxy.html

Geen opmerkingen:

Een reactie posten