dinsdag 11 november 2014

தங்க நகைத் திருட்டு: இலங்கைப் பெண்ணுக்கு டுபாயில் சிறை!

50 மில்லியன் ரூபாய் தருவதாக அரசாங்கம் பேரம் பேசியது: நடிகர் நலீன் பிரதீப்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 04:27.51 PM GMT ]
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்முதல் கட்டமாக தம்மை 50 மில்லியன் ரூபாய்களுக்கு விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்தாக மேல் மாகாண சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் நடிகருமான நளின் பிரதீப் உடவல குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் தமது முழுக்குடும்பத்துக்கும் கனேடிய, அவுஸ்திரேலிய அல்லது நெதர்லாந்து பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உறுதியளித்தாக உடவல குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
உடவல, இலங்கையின் பிரசித்தி பெற்ற தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகராவார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt2.html
தங்க நகைத் திருட்டு: இலங்கைப் பெண்ணுக்கு டுபாயில் சிறை
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 04:39.34 PM GMT ]
தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை பணிப்பெண்ணுக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றம் மூன்று மாத சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
அத்துடன் சிறைத்தண்டனை காலம் முடிவடைந்ததும் அவரை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த பெண்ணை டுபாயின் வேலை கொள்பவர் ஒருவர் தமது வயதான தாயை கவனிப்பதற்காக வேலையில் இணைத்துக் கொண்டார்.
எனினும் மூன்று மாதங்களாக குறித்த வீட்டில் பணியாற்றிய இலங்கைப் பெண், கடந்த ஜூன் மாதத்தில் திடீரென்று காணாமல் போனார்.
இதன்போதே தமது தாய் மற்றும் சகோதரிகளின் நகைகள் காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டதாக வேலை கொள்பவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
இதன்பின்னர் குறித்த இலங்கைப் பெண், காணாமல் போன நகைகளின் ஒரு தொகுதியுடன் கைது செய்யப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt3.html

Geen opmerkingen:

Een reactie posten