| வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக வட கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரிய கடல் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (31) காலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இந்த மோதல் ஆரம்பித்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன. ஏழு கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் நேரடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும் என வட கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் பீரங்கிகள் தரையிறக்கப்படுமேயானால் உடனடியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும் என தென் கொரியா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடல் எல்லை பகுதியில் 2010 ஆம் ஆண்டில் நடந்த போரில் வட கொரியர்கள் நால்வர் தென் கொரியாவினால் ஏவப்பட்ட பீரங்கியினால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாம். |
| 31 Mar 2014 |
Geen opmerkingen:
Een reactie posten