தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

சுவீடனில் அரசியல் தஞ்சம் கோரிய, இலங்கை படை அதிகாரி நாடு கடத்தல்!

அமைச்சர் ஜோன்ஸ்டனின் புதல்வர் கல்வித்துறையினரை, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 07:09.38 AM GMT ]
கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் மாகாண சபை தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் குற்றம்சுமத்தியுள்ளன.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜயசிங்க இது தொடர்பான முறைப்பாடொன்றை தேர்தல்கள் செயலகத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடமேல் மாகாணத்திலேயே அதிகளவில் கல்வி சார்ந்தோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் முறையிட்டுள்ளார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தாம் கண்ணுற்றதாக மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
இது தவிர சில கல்வித்துறையினர் தேர்தல் பணிகளிலிருந்து தமது கோரிக்கையின் படி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுவீடனில் அரசியல் தஞ்சம் கோரிய, இலங்கை படை அதிகாரி நாடு கடத்தல்
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 07:00.56 AM GMT ]
சுவீடனில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரி ஒருவரை சுவீடன் அதிகாரிகள், இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.
இந்த அதிகாரி தனக்கு மரண அச்சுறுத்தில் இருப்பதாக பொய்யான ஆதாரங்களை முன்வைத்து சுவீடனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தாக கூறப்படுகிறது.
தான் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தாக இந்த அதிகாரி சுவீடன் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
நாடு கடத்தப்பட்ட கடற்படையின் முன்னாள் அதிகாரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

Geen opmerkingen:

Een reactie posten