maandag 5 augustus 2013

பிரிட்டனில் கன்சவேட்டிவ் கட்சியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!- சாரா எல்ட்ரிஜ்


சீனா கொழும்பில் பாரிய களஞ்சியத்தை அமைக்கிறது
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 12:32.15 AM GMT ]
சீனாவின் நிதி உதவியுடன் கொழும்பு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த களஞ்சிய சாலை சுமார் 500 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வருடத்துக்கு 2.5 பில்லியன் கொள்கலன்களை ஏற்றி இறக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொழும்பு துறை முகத்தின் கொள்ளளவு ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் கன்சவேட்டிவ் கட்சியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!- சாரா எல்ட்ரிஜ்
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 12:28.22 AM GMT ]
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதில் பிரயோசனம் இல்லை என்று பிரித்தானிய புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் செயற்பாட்டாளர் சாரா எல்ட்ரிஜ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தல்களின் போதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிகரித்த நிதியையும் ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
ஆனால் அங்குள்ள தமிழ் மக்களுக்கு கன்சர்வேடிவ் கட்சியினால் எந்த விதமான நலன்களும் செய்யப்படவில்லை.
குறிப்பாக இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரி இருந்தன.
எனினும் இந்த கோரிக்கையை பிரித்தானியா ஏற்று நடக்கவில்லை.
இவ்வாறான செயற்பாடுகளால் கன்சவேடிவ் கட்சியை பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சாரா எல்ட்ரிஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten