தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 augustus 2013

இலங்கையர் உட்பட்டவர்கள் படகு அவுஸ்திரேலியாவை சென்றடைந்தது

ரவூப் ஹக்கீம் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கிறார்!- விமல் வீரவன்ச
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 02:58.08 PM GMT ]
ஹக்கீம் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்வதாலே, கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொள்ளாமல் தனித்து போட்டியிடுகின்றது என வீடமைப்பு, பொறியியல் கட்டுமானம் மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் என்ன நடந்தது. ராஜபக்சவின் நிர்வாகம் பள்ளிவாசலை உடைக்கும் நிர்வாகம் என்று பிரசாரம் செய்து மக்களின் வாக்குகளைப் பெற்றார்.
அதன் பின்னர் பள்ளி உடைக்கும் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டார்.
சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அவர் செய்கின்றார்.
இதேபோல வடக்கிற்கும் சென்று அரசிற்கெதிரான பிரசாரமொன்றை முன்னெடுத்து அதிலும் எதாவது செய்ய முயற்சிப்பார் என்றார்.
இலங்கையர் உட்பட்டவர்கள் படகு அவுஸ்திரேலியாவை சென்றடைந்தது
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 02:28.43 PM GMT ]
16 இலங்கையர்கள் அடங்கிய இரண்டு அகதிகள் குழுவினர் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர்.
இந்த இலங்கையர்கள் பெரும்பாலும் அகதிகள் பப்புவா நியூகினிக்கு அனுப்பப்படுவர் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்தல் விடுத்தமைக்கு முன்னரே இலங்கையில் இருந்து புறப்பட்டவர்களாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் இரண்டு சிறுமிகளும் ஒரு குழந்தையும் அடங்கியிருந்தது.
இரண்டாவது குழுவில் 120 பேர் உள்ளடங்கியிருந்தனர்.
இவர்களில் வயதானவர்கள் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகள் பப்புவா நியூகினிக்கு அனுப்பப்படுவர் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்தன் பின்னர்ää 22 படகுகளில் சுமார் 1600 பேர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten