zondag 4 augustus 2013

ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி போராட்டத்தை ஆரம்பித்தனர்

இலங்கை வரும் இளவரசர் சாள்ஸ் - கல்லறைகளை அகற்றுவதில் விவாதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 05:18.07 AM GMT ]
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரித்தானிய படை வீரரின் கல்லறையை அகற்றுவது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்று வருவதாக கலாச்சார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
1815ஆம் ஆண்டு அம்மை நோய் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த பிரித்தானிய படை வீரர்களின் 147 உடல்கள் இந்த மயான பூமியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மயான பூமி பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டிற்காக இலங்கை வரும் பிருத்தானிய இளவரசர் சாள்ஸ், இந்த மயான பூமிக்கும் விஜயம் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே, இந்த கல்லறைகளை அகற்றுவதா இல்லையா என்பது குறித்து விவாதங்கள் இடம்பெற்று வருவதாக கலாச்சார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி போராட்டத்தை ஆரம்பித்தனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 04:25.00 PM GMT ]
வெலிவேரியாவில் அண்மையில் உள்ளுர் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து ஊடக அமைப்பு ஒன்று மணிக்கட்டில் கறுப்புப்பட்டியை அணியும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழிற்சங்கம் இன்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தது
ஊடகவியலாளர் அடையாள அட்டை அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் வழங்குகின்ற அதேநேரம் ஊடகவியலாளர்கள் மீது தொடர்;ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஊடக அமைப்பினர் குறிப்பிட்டனர்
எனவே ஊடகவியலாளர் அடையாள அட்டைகளை கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் தமது கடமையை பிரச்சினையின்றி மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தகவல் திணைக்கள பணிப்பாளரை கேட்டுக்கொள்ளும் அட்டையும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten