[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 01:10.42 PM GMT ]
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
13 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த காணியை 1979 ஆம் ஆண்டு இரண்டு சுவிஸ் பிரஜைகள், தமிழர் ஒருவரிடம் இருந்து கொள்வனவு செய்திருந்தனர்.
போர் நடைபெற்ற காலத்தில் சுவிஸ் உரிமையாளர்கள் காணியை பார்வையிட செல்லாத காரணத்தினால், சிலர் போலி ஆவணங்களை தயார் செய்து அதனை விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணி பகுதி ஒன்றை தற்போது கொழும்பு மாவட்டத்தின் மாநகர சபை ஒன்றில் அங்கம் வகிக்கும் பிரதி முதல்வர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.
முஸ்லிம் ஒருவரிடம் இருந்து அவர் இந்த காணியை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 60 மில்லியன் ரூபாவுக்கு அவர் இந்த காணியை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த காணி கொள்ளையின் பின்னணியில் நிறுவனம் ஒன்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி காணி கொள்ளையடிப்பு பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்துடன் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
எனினும் அரசியல் தலையீடுகள் காரணமாக விசாரணைகள் நிறுத்தப்பட்டதுடன், அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த மிகப் பெரிய காணி கொள்ளையடிப்பு சம்பவத்துடன் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, முன்னாள் படை உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காணி கொள்ளை சம்பவம் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் எழுச்சிகரமாக முன்னெடுப்பு
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 01:34.31 PM GMT ]
இலக்கம் 1 இல் போட்டியிடும் திரு ப.அரியரத்தினம், இலக்கம் 5 இல் போட்டியிடும் திரு த. குருகுலராசா, இலக்கம் 7 இல் போட்டியிடும் திரு சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரை ஆதரித்து வட்டக்கச்சி, இராமநாதபுரம் கல்மடுநகர் ஆகிய பிரதேசங்களை இணைத்து, வட்டக்கச்சி பொதுச் சந்தை வளாகத்தில் நேற்று மாலை 4.00 மணிக்கு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் பிரசாரக் கூட்டம் ஆரம்பமானது.
தமிழ் மக்களின் உரிமைக்காக வீழ்ந்து விதையாகிப் போன செல்வங்களுக்கும் தமிழ் உணர்வோடு உயிர் நீத்த உறவுகளுக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து, வரவேற்புரையினை கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர் வே.செல்லத்துரை அவர்கள் நிகழ்த்த தலைமையுரையினை கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரைகளை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச தவிசாளர் நாவை குகராசா, உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் அ.தனிநாயகம், உப தவிசாளர் செந்தூரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், மாற்று வலுவுடையோர் சங்கத் தலைவர் தி.சிவமாறன் ஆகியோர் வழங்கினர்.
Geen opmerkingen:
Een reactie posten