zaterdag 10 augustus 2013

மஹிந்த ராஜபக்ச பெருமைக்குரிய தலைவராம்!-ஐதேகவிலிருந்து விலகியதற்கு அமைச்சர் சமரசிங்க விளக்கம்!

பெருமைக்குரிய தலைவராக இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இணைந்தமை தொடர்பில் தாம் வருத்தப்படவில்லை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அவர்தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பாட்டை கொண்டிருக்காத போதும் மஹி;ந்த ராஜபக்சவின் ஆட்சி முறையைக்கண்டு தேசத்துக்கு சேவை செய்தவதற்காக அரசாங்கத்தில் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தவகையில் தாமே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்த முதல நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten