donderdag 28 februari 2013

தமிழ் ஈழம் தொடர்பாக இந்திய அரசுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் கோரிக்கைகள் !


தமிழ் ஈழம் தொடர்பாக இந்திய அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியா தமிழர் பேரவை மனித உரிமை ஒருங்கிணைப்பாளர் நிர்மலன் இன்று வியாழக்கிழமை காலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
நான் சில நாட்களாக இந்தியாவில் தங்கியிருந்து இந்தியாவின் அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து தமிழ் ஈழ மக்களுக்கான ஆதரவாகவும், ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியும், அதற்கு அனைத்து கட்சித் தலைவவர்களும் இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டியும் கோரி வருகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்குத்தான் எங்கள் வலிபுரியும். ஆகவே தமிழக அரசியல் மற்றும் தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகளையும் நேரில் சந்தித்து பேசி வருகிறேன்.
நாங்கள் இந்திய அரசுக்கு முன் வைக்கும் கோரிக்கைகள் என்னவென்றால், ஐநா. மனித உரிமைக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தோடு இந்தியாவும் தனியாக கீழ்க்கண்ட தீர்மானங்களை முன்வழிய வேண்டும்.
இலங்கையில் அமைதி தொடர்ச்சியாக செயல்படும், இனக்கமான சூழலை உருவாக்கவும் பொறுப்பேற்கப்பட வேண்டும்.
தமிழகர்களின் அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பதற்கான நிர்வாக கட்டமைப்போ, அதிகாரமோ இலங்கை அரசியல் சட்டமோ மிகவும் மோசமானதாகவும் பலவீனமாகவும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் பற்றி விசாரிக்க சர்வதேச சுயாதீன விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க ஐ.நா. வற்புறுத்த வேண்டும்.
சட்ட விரோத படுகொலைகள், பாலுறவு வன்முறைகள், கட்டாயமாக காணாமல் போனவர்கள் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் தனிமனிதர்களின் பட்டியலை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் தொகுத்து அவர்களை அடையாளப்படுத்த வேண்டும்.
இதனை ஐ.நா.விடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். மேற்கண்ட தீர்மானங்களை இந்தியா முன்மொழிய வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
 http://news.lankasri.com/show-RUmryCRcNYnvz.html

Geen opmerkingen:

Een reactie posten